Home ஜோதிடம் லக்ன பலன்கள் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தின் அதிபதி சனி பகவனாவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் சற்று உயரமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல கவர்ச்சியான, மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். தெய்வ பக்தியும், இரக்க குணமும் உள்ளவர்கள். பிடிக்காதவர்களிடம் விலகியே இருப்பார்கள். அவர்கள் மூலம் எந்த ரூபத்தில் எந்த உயர்வு வந்தாலும் ஏற்று கொள்ள மாட்டார்கள். உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து, இவர்களுக்கு எதிர்ப்பு இருக்கும்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

இவர்கள் எந்த விஷயத்தையும் அலசி ஆராயாமல் ஒரு முடிவுக்கு வரமாட்டார்கள். அமைதியான பேர்விழிகள். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க கூடியவர்கள். பல்வேறு விஷயங்களை பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் அவ்வளவு எளிதில் எதையும் வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள். எல்லோருக்கும் உதவி செய்யும் வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். நினைவாற்றல் அதிகம் கொண்டவர்கள். எண்ணங்களை செயலாக்க கடுமையாக உழைப்பார்கள். எதையும் ஒளிவு, மறைவில்லாமல் பேசுவார்கள். இவர்கள் நியாய, அநியாயத்தை யாராக இருந்தாலும் பயமின்றி எடுத்துச் சொல்வார்கள்.

இவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் தான் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அந்த சமயத்தில் செல்வச் செழிப்பும், சொத்துக்களும் உண்டாகும். எதையும் எளிதில் உள்வாங்கி கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். எதையாவது பற்றி சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். வாழ்வில் வெற்றி பெறுவதற்கு தேவையான வழிகளை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். எதற்கும் பயப்பட மாட்டார்கள். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை முகத்தில் காட்டி கொள்ள மாட்டார்கள். எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருப்பார்கள்.

விளையாட்டுத் சம்பந்தபட்ட துறையில், இவர்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கும். இவர்கள் பார்ப்பதற்கு சாதரணமாக வலுவில்லாதவர்கள் போல தெரிந்தாலும் வலுவான உடற்கட்டை கொண்டவர்கள். பணத்தை சேர்ப்பதிலும், செலவழிப்பதிலும் மிகுந்த கவனமாக இருப்பார்கள். இவர்கள் ஒழுக்கம் மற்றும் சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் தான் கொண்ட எண்ணங்களிலும் செயல்களிலும், மிகுந்த உறுதியுடன் இருப்பார்கள்.

இவர்கள் மற்றவர்கள் நம்பிக்கை மற்றும் நட்புக்கு விசுவாசமாக இருப்பார்கள். இவர்களில் ஒரு சிலர் குடும்ப பொறுப்பை சிறு வயதிலே ஏற்பார்கள். மூட நம்பிக்கை, பழக்க வழக்கங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள். வாழ்க்கையில் பலவித ஏற்றதாழ்வுகளை இவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். பழைய சாஸ்திர சம்பிரதாயங்களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இவர்கள் எதையும் விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி செய்து விளக்கம் காண்பவர்களாக இருப்பார்கள். ஒரு விஷயத்தில் முடிவு எடுத்துவிட்டால் அவ்வளவு எளிதில் அதில் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பரந்த மனப்பான்மை உள்ளவர்கள்.

யார் எதை கேட்டாலும் பொறுமையாகவும் சாந்தமாகவும் பதில் சொல்வார்கள். எல்லா விஷயங்களையும் கொஞ்சம் விட்டுப் தான் பிடிப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன் பழக மாட்டார்கள். மற்றவர்களை பேச விட்டு, அவர்களின் நாடி பிடித்து பார்த்து விட்டுத்தான் தான் சொல்ல வேண்டிய விஷயத்தைப் பேசுவார்கள். எத்தனை திறமைகள் இவர்களுக்குள் மறைந்து கிடந்தாலும் சரியாகவும், முறையாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்தத் தெரியாமல் திணறுவார்கள். இவர்களை போன்றே மனநிலை கொண்ட ஒருவரையே வாழக்கை துணையாக்க விரும்புவார்கள்.

இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை கிழக்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து அமையும். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை சற்று உயரமான உருவம் கொண்டவராகவும், எடுத்த முடிவுகளில் உறுதியானவராகவும், தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் திருமண தடை நீங்க சிவபெருமானையும், முருகனையும் வணங்கி வரலாம்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version