ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால்

‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் புத்தகம் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது. அதன்படி ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

ஊர்வன விலங்குகள் கனவு பலன்கள்

பல்லி கனவில் வந்தால்

1. பல்லி ஊர்ந்து செல்வது போல கனவு கண்டால் தொழிலில் உயர்வு ஏற்படும் என்று அர்த்தம்.
2. இரண்டு பல்லிகள் இணைவது போல கனவு கண்டால் வீட்டில் நல்லது நடக்க போகிறது என்று அர்த்தம்.
3. இரண்டு பல்லிகள் சண்டை போடுவது போல கனவு கண்டால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட போவதன் அறிகுறியாகும்.
4. பல்லி உங்கள் கனவில் வந்தால் நீங்கள் வகித்து வரும் பதவிக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

எறும்பு கனவில் வந்தால்

1. எறும்பு ஊர்வதை போல கனவு கண்டால் பதவி உயர்வு ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
2. எறும்புகள் வரிசையாக கூட்டமாக செல்வது போல கனவு வந்தால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்று அர்த்தம்.
3. எறும்புகள் சர்க்கரையை சாப்பிடுவது போலவே அல்லது உணவை சுமந்து செல்வது போல கனவு வந்தால் நீங்கள் சேமித்து வைத்த பொருள்கள் சிறிது சிறிதாக கரையும் என்று அர்த்தம்.
4. எறும்புகளை கூட்டமாக கனவில் கண்டால் மன கஷ்டம், பொருள் நஷ்டம் உண்டாகும் என்று அர்த்தம்.

தேள் கனவு பலன்கள்

தேள் கனவில் வந்தால்

1. தேள் உங்கள் கனவில் வந்தால் ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
2. தேள் உங்களை கொட்டி விட்டது போல கனவு கண்டால் நீங்கள் மேற்கொண்ட காரியத்தில் காரிய சித்தி ஏற்படும் என்று அர்த்தம்.

பாம்பு கனவில் வந்தால்

1. பாம்பு படம் எடுத்து ஆடுவது போல கனவு கண்டால் பொருள் விரயம் ஏற்படும் என்று அர்த்தம்.
2. பாம்பு புற்று கனவில் வந்தால் உங்களுக்கு இன்பம் உண்டாகும் என்று அர்த்தம்.
3. பாம்பு உங்கள் மேல் ஏறி செல்வது போல கனவு கண்டால் உங்களுக்கு உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறையும் என்று அர்த்தம்.
4. சாரைப்பாம்பு உங்கள் கனவில் வந்தால் நிறைய எதிரிகள் நண்பண் என்ற போர்வையில் உங்கள் அருகில் உள்ளார்கள் என்று அர்த்தம்.
5. நல்ல பாம்பு கனவில் வந்தால் எதிரிகளால் தொல்லை ஏற்படும் என்று அர்த்தம்.
6. நல்ல பாம்பை நீங்கள் கொல்வது போல கனவு கண்டால் எதிரிகளின் தொல்லை குறையும் என்று அர்த்தம்.
7. நல்ல பாம்பை நீங்கள் துரத்துவது போல கனவு வந்தால் உங்கள் வறுமை நிலை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும் என்று பொருள்.
8. நல்ல பாம்பு உங்களை துரத்துவது போல கனவு கண்டால் பெரிய துன்பம் உண்டாக போகிறது என்று அர்த்தம்.
9. ஒரே ஒரு நல்ல பாம்பைக் கனவில் கண்டால் நம்முடைய விரோதிகளால் தொல்லை ஏற்படும் என்று அர்த்தம்.

பாம்பு கனவு பலன்கள்
10. இரண்டு பாம்புகளை ஒரே நேரத்தில் கனவில் கண்டால் உங்களுக்கு நன்மை உண்டாக போகிறது என்று பொருள்.
11. பாம்பை கொல்வது போல கனவு வந்தால் உங்களுக்கு விரோதிகளால் இதுவரை ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும் என்று அர்த்தம்.
12. திருமணம் ஆகாதவர்களுக்கு பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணம் ஆனவருக்கு செல்வம் வந்து சேரும் என்று அர்த்தம்.
13. பாம்பு கடித்து விட்டது போல கனவு வந்தால் தனலாபம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
14. பாம்பு உங்களின் காலை பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் உங்களை சனி பிடிக்கப் போகிறது என்று அர்த்தம்.
15. பாம்பு கடித்து விட்டது போலவும், கடித்த இடத்தில் இருந்து ரத்தம் வருவது போலவும் கனவு கண்டால் உங்களை பிடித்த சனி விலகிவிட்டது என்று பொருள்.
16. பாம்பு கழுத்தில் மாலை போல விழுவதாக கனவு கண்டால் நீங்கள் செல்வந்தர் ஆக போகிறீர்கள் என்று பொருள்.
17. பாம்பு வேகமாக செல்வது போல் கனவு கண்டால் நன்மை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கனவில் பூச்சிகளை கண்டால்

பூச்சிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூச்சிகள் கனவில் வந்தால் கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மை அறியாமல் வருவதாகும். குறிப்பிட்ட சில சமயங்களில், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. நாம்...

சதாவரி என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு-ன் மருத்துவ பயன்கள்

சதாவரி என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு சதாவரி என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம் ஆகும். இது பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதை வடமொழியில் சதாவரி...
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய

சரும அழகை பராமரிக்க சில எளிய அழகு குறிப்புகள்

சரும அழகை பராமரிக்க சில எளிய அழகு குறிப்புகள் சரும அழகை மேம்படுத்த நாம் செய்யும் சில விஷயங்கள் சருமத்திற்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் சரும நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது. இரவில் தயிருடன் சிறிதளவு...
வெந்தயக்கீரை மருத்துவ குணங்கள்

வெந்தயக்கீரை மருத்துவ பயன்கள்

வெந்தய கீரை வெந்தயம் கீரை மற்றும் வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயம் தமிழர்களின் சமையலில் தவறாமல் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருளாகும். இதன் செடி கீரையாகவும், இதன் விதைகளான வெந்தயம் உணவுகளில் சுவையூட்டியாகவும்...
ஈரல் வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் தேவையான பொருட்கள் ஈரல் – ½ கிலோ பட்டை - 1 கிராம்பு - 2 வெங்காயம் – 1 கப் ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய்...
6ம் எண் குணநலன்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 6ம் எண் சுக்கிரன் பகவானுக்குரிய எண்ணாகும். 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள். 6ம் எண்ணின் ஆதிக்கத்தில்...
கரிநாள் பரிகாரம்

கரிநாட்கள் என்றால் என்ன? கரிநாளில் சுபகாரியம் செய்வதை ஏன் தவிர்க்க வேண்டும்

கரிநாட்கள் என்றால் என்ன நமது கலெண்டர்களில் சில குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் கரிநாள் என்று குறிபிடபட்டிருக்கும். அப்படி கரிநாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சூரிய கதிர் வீச்சின் தாக்கம் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் சற்று...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.