கோவில் குளத்தில் காசு போடலாமா?

கோவில் குளத்தில் காசு ஏன் போடுகிறார்கள்

மிகவும் பழமை வாய்ந்த கோவில்களுக்கு நாம் சென்றால் அந்த கோவில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சிலர் அதில் காசு போடுவதையும் பார்க்கலாம். இதை ஒரு சம்பிரதாயமாக நினைத்து பலரும் செய்வதை நாம் இன்றும் பார்க்கலாம். ஏன் கோவில் கிணறு, குளத்தில் காசு போடுகிறோம் என பலருக்கும் தெரியாது. அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை நாம் இங்கு பார்க்கலாம்.

கோவில் குளத்தில் காசு போடுவது

செம்பு உலோகம்

அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த காசுகள் பெரும்பாலும் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டது. செம்பு உலோகமானது மண், நீர் வண்டல் மற்றும் காற்றில் இயற்கையாக உருவாகிறது. நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சில உலோகங்கள் நமது உடலில் கலப்பது அவசியமாகும். அந்த வகையில் செம்பு உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது. செம்பை தண்ணீருக்குள் போட்டு வைப்பதும், தண்ணீர் எடுக்கப் பயன்படுத்வதற்கும் என செம்புப் பாத்திரங்கள் உபயோகிக்கும் பழக்கம் அக்காலங்களில் இருந்தது.

நீர் ஆதாரம்

அக்காலங்களில் நீரானது குழாய்கள் மூலம் விநியோகிக்கும் முறை இல்லை. மக்கள் தங்கள் நீர் தேவைக்கு குளங்கள், குட்டைகள், கிணறுகள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றையே சார்ந்திருந்தனர். குளம், கிணறுகளில் உள்ள தண்ணீருடன் செம்பு கலந்த பின் அந்த நீரை அருந்துவது வலிமையும் குளிர்ச்சியும் தந்து நலம் பயக்கும். குளம் இல்லாத கோயிலை பார்ப்பதே அக்காலத்தில் மிகவும் அரிது. இதனால் செப்புக் காசுகளை குளத்தில் போடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் இக்காலத்தில் குளம் மற்றும் கிணற்று நீரை முக்கிய நீர் ஆதாரமாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.

கோவில் குளத்தில் காசு போடுவதற்கான காரணம்

இரும்பு காசு

இப்போதுள்ள கால கட்டத்தில் செப்பு காசு முறையே அடியோடு அழிந்துவிட்டது. ஆனால் நாம் அக்கால முறையான காசு போடுவதையே, இன்றும் ஒரு வழக்கமாக நினைத்து நம்மில் பலர் இரும்பு காசுகளை இன்றும் கோவில் குளம், கிணறுகளில் போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் செம்பு காசுகளை கிணறு, குளத்தில் போடுவதே நமக்கு நன்மை அளிக்கும்.

நம்முடைய தமிழரின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் அறிவியல் ஒளிந்திருக்கிறது. மஞ்சள் தெளிப்பது, பாயில் உறங்குவது என நம் முன்னோர்கள் செய்த அனைத்தும் அறிவியலுடன் கலந்தது. நாம் செய்யும் அனைத்து செயலுக்கு பின்னாலும் அறிவியல் உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ மிளகாய் தூள் - 1  தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகு தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் -...
ஆடாதொடை இலையின் பயன்கள்

நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப...
யோகம் மற்றும் தோஷம்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்களை பொருத்து அந்த ஜாதகர் யோகம் மற்றும் அதிர்ஷ்டம் உள்ளவராகவும், யோகமற்றவராகவும், தோஷமுள்ளவராகவும் ஆக்குகிறது. யோகங்களும், தோஷங்களும் பொதுவாக எல்லாருடைய ஜாதகத்திலும் காணப்படுகின்ற ஒன்றாகும். ஜாதகத்தில்...
களத்திர தோஷம் பரிகாரம்

களத்திர தோஷம் என்றால் என்ன? களத்திர தோஷத்திற்கான நிவர்த்தி / பரிகாரம்

களத்திர தோஷம் என்றால் என்ன? ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலோ அல்லது ஒன்றுடன்...
வைகாசியில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவரா நீங்கள் பன்னிரண்டு மாதங்களில் இரண்டாவதாக வரும் தமிழ் மாதம் வைகாசியாகும். சூரியன் ரிஷப ராசியில் நுழையும் மாதமே வைகாசியாகும். வைகாசி மாதம் மங்களகாரமான காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என...
கெட்ட கனவு வந்தால் என்ன செய்ய வேண்டும்

கெட்ட கனவுகள் ஏற்படாமல் தடுக்க பரிகாரம்

கெட்ட கனவுகள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் மனிதனின் ஆயுட்காலத்தில் பெரும்பான்மையான நேரம் தூக்கத்தில் தான் கழிகிறது. அந்த தூக்கத்தில் ஒரு சில கெட்ட கனவுகள் வந்து வந்து நம்மை பாடாய்படுத்திவிடும். அந்த கெட்ட கனவுக்கான...
திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்? உலகிலேயே இந்தியாவில் உள்ள மணமான பெண்கள் மட்டும் தான் மெட்டி அணியும் கலாச்சாரத்தை காலங்காலமாக வழக்கமாக வைத்துள்ளனர். மெட்டி அணிவது வெறும் திருமணம் ஆனதற்கான அடையாளம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.