நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் உண்டாகும் பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால்

‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது. அதன்படி ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

மீன் கனவில் வந்தால்

மீன் கனவு பலன்கள்

1. மீன்கள் கூட்டத்தை கனவில் கண்டால் எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும் என்று அர்த்தம்.
2. மீன் பிடிப்பது போல கனவு வந்தால் மிகவும் நல்லது.
3. மீன் வலையில் சிக்கி துடிப்பதை போலவோ மீன் இறந்துவிட்டது போலவே கனவு வந்தால் ஏற்கனவே செய்த செயலால் அவமானம் வந்து சேரும் என்று அர்த்தம்.
4. சுறாமீன் கனவில் வந்தால் நண்பர்களின் வீட்டிற்கு விருந்திற்கு செல்வோம் என்று அர்த்தம்.

ஆமை கனவில் வந்தால்

1. ஆமை கனவில் வந்தால் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு வெற்றி அடைவீர்கள் என்று அர்த்தம்.
2. ஆமைகள் கூட்டம் கனவில் வந்தால் மனதில் இருந்த கவலைகள் பறந்து போய் நிம்மதி பிறக்கும் என்று அர்த்தம்.

தவளை கனவில் வந்தால்

தவளை கனவு பலன்கள்

1. தவளை கனவில் வந்தால் கவலைகள் மறைந்து மனதில் நிம்மதி பிறக்க போகிறது என்று அர்த்தம்.
2. தவளையை கையால் பிடிப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு வரவிருந்த ஒரு நல்ல சந்தர்ப்பம் கை நழுவ போகிறது என்று அர்த்தம்.
3. தவளைகள் கூட்டமாக கனவில் வந்தால் மிகவும் நல்லது. செய்யும் தொழிலில் அபிவிருத்தி ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
4. தவளை கத்துவது போல கனவு வந்தால் அது கெடு பலனை கொடுக்கும்.
5. தேரை கனவில் வந்தால் மிக நெருங்கிய நண்பர்கள் இறப்பார்கள் என்று அர்த்தம்.
6. தேரை மேலே விழுவது போல கனவு கண்டால் மருத்துவ செலவுகள் ஏற்பட கூடும் என்று அர்த்தம்.

முதலை கனவில் வந்தால்

முதலை கனவு பலன்கள்

1. முதலை உங்கள் காலை கடிப்பது போல கனவு கண்டால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற போகிறீர்கள் என்று அர்த்தம்.
2. முதலை கனவில் வந்தால் உங்களின் அறிவாற்றல் மேன் மேலும் பெருகும் என்று அர்த்தம்.

நண்டு கனவில் வந்தால்

1. நண்டு கனவில் வந்தால் கடன் ஏற்பட்டு துன்பம் உண்டாக போகிறது என்று பொருள்.
2. கடலில் பயணம் செல்லும் மாலுமிகள் கனவில் நண்டு வந்தால் கப்பலுக்கு பெரிய ஆபத்து வரபோகிறது என்று அர்த்தம்.
3. நத்தையை கனவில் கண்டால் தொழில் மெதுவாக பாதிக்கபட போகிறது என்று அர்த்தம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பலாப்பழ பாயாசம்

கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம்

பலாப்பழ பாயாசம் பலாப்பழத்தில் எண்ணற்ற உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளன. சுவையான பலாப்பழ பாயாசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் பலாப்பழ சுளைகள் - தேவையான அளவு தேங்காய் பால் -...
27 நட்சத்திரங்கள் பெயர்கள்

27 நட்சத்திரங்கள் பற்றிய விரிவான ஒரு பார்வை

27 நட்சத்திரங்கள் ஒரு பார்வை ஜோதிடத்தில் மிக முக்கியமானது நட்சத்திரங்கள் ஆகும். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய பிறந்த ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ...
ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #6

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும், அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கோள்கள் இருக்கும் நிலையை வைத்து நிர்ணயிக்கபடுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
திதி என்றால் என்ன

திதிகள் என்றால் என்ன? அவை யாவை?

பஞ்சாங்கமும், திதிகளும் நமது தினசரி வாழ்க்கையில், ஒரு நாளை துவங்கும் போதே அந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் எல்லா நாட்களும் அவ்வாறு இனிய நாளாக அமைவதில்லை. ஒவ்வொரு...
காகம் கரையும் பலன்கள்

காகம் சொல்லும் சகுனங்கள்

காகம் உணர்த்தும் சகுனம் காகம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் பறவை இனம் ஆகும். இந்து சமயத்தில் காகம் அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. எம லோகத்தின் வாயிலில் காகம் வீற்று இருப்பதாக ஒரு...
கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கடக லக்னத்தின் அதிபதி சந்திரன் ஆவார். கடக லக்னத்தில் பிறந்தவர்கள் உடலாலும் மனதாலும் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் அழகான மற்றும் கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டவர்கள். வாக்கு...
2ம் எண்ணின் குணநலன்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 2ம் எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 2ம் எண்ணில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.