திருமணத்தில் ஏழு அடி பிரார்த்தனை ஏன் செய்யபடுகிறது?

மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை

திருமணத்தில் பல விதமான சடங்குகள் செய்யபட்டாலும் அதன் முழுமையான அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று தான் மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை. ஏழு அடி பிரார்த்தனை என்றால் என்ன, அதை எவ்வாறு செய்ய வேண்டும், அதன் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

திருமணத்தில் மணமகனாவன், மணமகளின் கழுத்தில் தாலி கட்டிய பின் அக்னி குண்டத்தை சுற்றி ஏழு அடிகள் மணமகளின் கையை பிடித்து நடப்பது நம்முடைய முன்னோர்கள் காலம் தொட்டு இன்று வரை பின்பற்றப்பட்டு வரும் ஒரு சாஸ்திர சம்பிரதாயமாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும்போது மணமகன், மணமகளிடம் இறைவன் உனக்குத் துணையாக இருப்பான் என்று தன்னுடைய பிரார்த்தனையைச் சொல்கிறான். அந்த ஏழு அடிக்கும் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்,

மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை

முதல் அடி : பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி : ஆரோக்கியமான நீண்ட வாழ்வு வாழ வேண்டும்.

மூன்றாம் அடி : நல்ல காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி : சுகமும், செல்வமும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி : லட்சுமி கடாட்சம் பெற வேண்டும்.

ஆறாவது அடி : நாட்டில் நல்ல பருவங்கள் நிரந்தரமாக தொடர வேண்டும்.

ஏழாவது அடி : தர்மங்கள் நிலைக்க வேண்டும்

என்று இறைவனிடம் பிரார்த்திப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சடங்கில் மனிதர்களிடம் இருக்கும் சூட்சமமான மனோவியல் விஷயத்தை சாஸ்திரத்தில் உணர்த்தி உள்ளார்கள் நம்முடைய முன்னோர்கள். 2 நபர்கள் ஒன்றாக 7 அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சிநேகிதம் உண்டாகும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

உதாரணமாக, நாம் சாலையில் நடக்கும்போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால், ஏழு அடி நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டி சென்று விடுவோம் அல்லது அவர்களை முன்னே போக விடுவோம். முழுமையாக 7 அடிகள் இரண்டு பேரும் ஒன்றாக நடக்க மாட்டோம். இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள் நடந்து விடும் என்பது ஒரு சூட்சமமான விஷயம் ஆகும்.

இதனால் தான் இந்த ஏழு அடி பிரார்த்தனை சடங்கு நடத்தபடுகிறது. இதனால் தம்பதிகள் இடையே நல்ல புரிதல் உண்டாகிறது.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூராடம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பூராடம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு பூராடம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : வருணன் பூராடம் நட்சத்திரத்தின் பரிகார...
1ம் எண்ணில் பிறந்தவர்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 1ம் எண் சூரிய பகவானுக்கு உரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். முதலாம் எண்ணில்...
முதலுதவியின் பயன்கள்

முதலுதவி என்றால் என்ன? முதலுதவியின் வரலாறு

முதலுதவி என்றால் என்ன முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் சிகிச்சையாகும். தேவையான முழு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயம்பட்ட நபர்க்கு கொடுக்கபடும்....
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரோகிணி நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம் ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சுக்கிரன் ரோகிணி நட்சத்திரத்தின் அதிதேவதை : பிரம்மா ரோகிணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
புலி கனவு பலன்கள்

காட்டு விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்

காட்டு விலங்குகளை கனவில் கண்டால் கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மை அறியாமல் வருவதாகும். குறிப்பிட்ட சில சமயங்களில், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு....
மாவிலை தோரணம் கட்டும் முறை

சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம் வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும். வீட்டில் நடக்கும் எந்த...
நட்சத்திரங்களும் கோவில்களும்

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோவில்களும்

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோவில்களும் அஸ்வினி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வர பகவானை வணங்கி வருவது நல்லது. திருநள்ளாறு சென்று சனீஸ்வரன் மற்றும் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரரை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். பரணி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.