ஆடிச் செவ்வாயும் ஔவையார் விரதமும்

ஆடிச் செவ்வாய் விரதம்

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் தான். மற்ற மாதங்களை காட்டிலும் ஆடி மாதத்தில் தான் அம்மனுக்கு வழிபாடுகள் அதிக அளவில் நடைபெறும். குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமை, வெள்ளி கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்த விசேஷ நாட்களாகும்.

இந்த மூன்று நாட்களில் இந்த மூன்று நாட்களில் ஆடிச் செவ்வாய் மிகவும் சிறப்பானதாகும். ஆடி செவ்வாய் தேடிக் குளி.. அரைத்த மஞ்சளை பூசிக்குளி’ என்பது பழஞ்சொல். இதில் இருந்தே ஆடிச் செவ்வாயன்று என்ணெய் தேய்த்து நீராடுதலின் முக்கியத்துவம் விளங்கும். அவ்வாறு செய்தால் வீட்டில் மங்கலம் தங்கும் என்பது மரபு.

ஆடி செவ்வாய் வழிபாடு  ஆடி செவ்வாயில் தான் ஔவையார் விரதம் இருந்து அம்மனை வழிபட்டார். ஆடி செவ்வாய் மற்றும் ஔவையார் விரதம் எதனால் சிறப்படைந்தது என்றும் அதன் மகத்துவம் குறித்தும் அறிந்து கொள்வோம்.

ஆடி செவ்வாய்

ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை தோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும் என்பது காலம், காலமாக உள்ள நம்பிக்கையாகும். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைபிடிப்பதால், கணவனின் ஆயுள் அதிகரிக்கும், குழந்தை வரம் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு மிகவும் உகந்த ஆடி செவ்வாய் கிழமையன்று, அதிகாலையில் எழுந்து குளித்து பூஜையறையை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜையறையில் உள்ள இறைவன் படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து நெய்வேத்தியம் வைத்து வழிபட வேண்டும். ஆடி செவ்வாயில் அம்மன் பாடல்கள், லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி போன்ற பாடல்கள் படிப்பது நல்லது.

ஔவையார்

ஆடி மாதம் செவ்வாய் தோறும் ஔவையார் வழிபாடு செய்து விரதம் இருப்பது நல்லது.
நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், கேசரி ஏதாவது ஒன்று செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, தீபத்திற்கு அருகில் ஒரு சிறிய வாழை இலை அல்லது வெற்றிலையை வைத்து, அதில் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஔவையார் வழிபாடு அந்த குங்குமத்தை 11 சுமங்கலி பெண்களுக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பலன்கள்

ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் வீட்டில் அனைத்து சௌகரியங்களும் கிடைக்கும்.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம் என எந்த தோஷங்கள் இருந்தாலும் அத்தனை தோஷங்களும், கஷ்டங்களும் விலகும்.

திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.
ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைபிடிப்பதால், கணவனின் ஆயுள் நீடிக்கும், குழந்தை வரம் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தவளை கனவு பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் உண்டாகும் பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் – 4 கால்கள் கத்திரிக்காய் - 4 புளி - ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப் ...
திப்பிலி மருத்துவ குணங்கள்

திப்பிலி மருத்துவ பயன்கள்

திப்பிலி திப்பிலி ஒரு மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது ஆங்கிலத்தில் ‘Long Pepper’ என அழைக்கபடுகிறது. இது இந்தியாவின் வெப்பமான...
காபி, டீ

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்தான ஆரோக்கியமான உணவை தேர்ந்த்தெடுத்து சாப்பிடுவது மிகவும் முக்கயமானதாகும். அவ்வாறு நாம் பார்த்து பார்த்து சாப்பிடும் உணவை எப்போது எப்படி சாப்பிட...
அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்

அரிசி கழுவிய தண்ணீரில் மறைந்திருக்கும் அற்புத பயன்கள்

அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்  நம் சமையலைறையில் உள்ள பல பொருட்கள் நமது அழகை தக்கவைத்துக் கொள்ள பயன்படுகிறது. உதாரணமாக மஞ்சள் தூள், தயிர், அரிசி மாவு, தக்காளி, வெள்ளரிக்காய், இன்னும் பல உள்ளன....
7ம் எண் குணநலன்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 7ம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும். 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றவர்கள் செல்லும் வழியை தவிர்த்து...
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சதயம் நட்சத்திரத்தின் இராசி : கும்பம் சதயம் நட்சத்திரத்தின் அதிபதி : ராகு சதயம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி சதயம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : யமன் சதயம் நட்சத்திரத்தின் பரிகார...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.