மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?எவ்வாறு பார்க்க வேண்டும்

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?

திருமணம் ஆகப்போகும் மணமகன், மணமகள் இருவருக்கும் இடையே மகேந்திர பொருத்தம் இருப்பது மிகவும் முக்கியமாகும். மகேந்திர பொருத்தம் என்பது புத்திர பாக்கியத்தை நிலைக்க செய்வது, அதாவது இந்த மகேந்திர பொருத்தம் இருந்தால்தான் அவர்களின் வம்சம் தழைக்கும். இந்த பொருத்தம் குழந்தை பாக்கியத்தையும், செல்வத்தையும் அளிக்கிறது. மகேந்திர பொருத்தம் இல்லாவிட்டால் நாடி பொருத்தம் பார்க்கப்படும் அல்லது மர பொருத்தம் பார்க்கப்படும்.

மகேந்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?

குழந்தை பாக்கியம் உண்டா? இல்லையா? என்பதை இந்த மகேந்திர பொருத்தம் மூலம் அறியலாம். இது பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிய தொகை 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவது நட்சத்திரம் என்றால் மகேந்திர பொருத்தம் உள்ளது என அறிந்து கொள்ளலாம். இந்த மகேந்திர பொருத்தம் இருந்தால் தான் குழந்தை பாக்கியமும், குழந்தைகளால் செல்வமும், வளமும் உண்டாகும்.

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?

மகேந்திர பொருத்தம் இல்லை என்பதை எவ்வாறு கண்டறிவது?
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை வரும் எண்ணிக்கை 2, 3, 5, 6, 8, 9, 11, 12, 14, 15, 17, 18, 20, 21, 23, 24, 26, 27 ஆக இருந்தால் மகேந்திர பொருத்தம் இல்லை. மகேந்திர பொருத்தம் இல்லையெனில், ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தின் பலனைக்கொண்டு ஜோதிடர்கள் கணித்து கூறுவார்கள்.

ஜாதக ரீதியாக பொருத்தம்

மனிதர்களாக பிறந்த அனைவரும் ஆசைப்படுவது வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்கியமான நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். இதை வழங்கக்கூடிய தன்மை சுக்கிர பகவானுக்கு மட்டுமே உண்டு. சுக்கிரன் நமது ஜாதகத்தில் நல்ல யோகத்துடன் இருப்பது அவசியம். சுக்கிரன் லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால், நல்ல யோக பலன்களை வாரி வழங்குவார்.

அதே வேளையில், சுக்கிரன் ஜாதகத்தில் நீச்சம் பெற்றாலோ 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்திருந்தாலோ, பாவ கிரகங்களின் சேர்க்கை பெற்றுப் பலம் குறைந்து இருந்தாலோ எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். ஆண் பெண் இருவருக்கும் மகேந்திர பொருத்தம் இருந்தாலும், ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன், மற்றும் குரு பகவான் நிலையை ஜோதிட ரீதியாக கணிக்க வேண்டும். லக்னத்துக்கு 5ஆம் இடத்தையும், ராசிக்கு 5ஆம் இடத்தையும் பார்த்தல் வேண்டும்.

ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும், பெண் ஜாதகத்தில் குருவும் நன்றாக இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் பிரச்சனை இருக்காது. ஆனால் 5ஆம் இடத்துக்கு அதிபதியானவர் பாவ கிரகத்துடன் தொடர்பில் இருக்கிறாரா என்பதை அனுபவம் வாய்ந்த ஜோதிடரின் உதவியுடன் ஆராய வேண்டும். இது சரியில்லாவிட்டால் மகேந்திர பொருத்தம் இருந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் பிரச்சனைகள் இருக்கும்.

மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கக் கூடியவன் சந்திர பகவான். நாம் எண்ணியதை செயல்படுத்தக் கூடியவன் சுக்கிர பகவான். எண்ணம் நல்லதாக இருந்தால் நடப்பது யாவும் நல்லதாகவே நடக்கும். தகுந்த பரிகாரம் செய்வதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...
சிவகரந்தை நன்மைகள்

சிவக்கரந்தை மூலிகையின் மருத்துவ நன்மைகள்

சிவக்கரந்தை சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு...
உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்   சமைக்கும் பொழுது இன்முகத்துடன் சமைத்தால் தான் அந்த சமையல் ருசி அதிகரிக்கும். அது போல உணவு சாப்பிடும் பொழுதும் பேசாமல்,...
how to make somas

சுவையான மொறு மொறு சோமாஸ் செய்வது எப்படி ?

சோமாஸ் தேவையான பொருட்கள் மைதா - 1 கப் உப்பு - சிறிதளவு உருக்கிய டால்டா (அ) நெய் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு பூரணம் செய்ய ரவை...
மிதுன ராசி

மிதுன ராசி பொது பலன்கள் – மிதுன ராசி குணங்கள்

மிதுன ராசி குணங்கள் மிதுன ராசியின் அதிபதி புதன் பகவனாவார். மிதுன ராசியில் மிருகசீரிஷம் நட்சத்திரம் 3, 4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரங்கள் 1, 2, 3 ஆம் பாதங்கள் ஆகியவை...
ஆரோக்கியமான நகங்கள்

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதை உங்கள் நகத்தை வைத்தே சொல்லிவிடலாம்.

ஆரோக்கியமான நகங்கள் நம் உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று நகம். ' ஆல்ஃபா கெரட்டின் ' என்னும் புரதப் பொருளால் ஆனது. டென்ஷனாக இருக்கும்போது நகத்தைக் கடித்துத் துப்புவதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது...
குழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்

எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்

எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் குழந்தை பிறப்பதே அதிஷ்டம் தான்,கிழமை என்பது உறவுகள் என்று பொருள். அனைத்து கிழமைகளும் ஒவ்வொரு கடவுளுடைய தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இருந்தாலும் குழந்தை எந்த கிழமைகளில் பிறந்தால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.