கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் அடக்கமான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். எல்லாவற்றிலும் திறமைசாலியாக விளங்குவார்கள். படிப்பில் கெட்டிகாரர்கள். பேச்சாலும், செயலாலும் மற்றவரை புண்படுத்த மாட்டார்கள். எடுக்கும் காரியங்களில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு அதை முடித்து காட்டுவார்கள். எதையும் முன் நின்று முடிக்கும் ஆற்றலும், விவேகமும் இயற்கையாகவே இவர்களுக்கு அமைய பெற்று இருக்கும். சூழ்நிலைக்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்டவர்கள்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

 

 

கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள். ஆதனால் எளிதில் பொன், பொருள் சேர்கை பெற்று பணக்காரர் ஆகிவிடுவார்கள். நல்ல வழியில் மற்றவர்களை நடக்க கற்றுக் கொடுக்கக் கூடியவர்கள். இவர்களின் நட்பு வட்டம் அதிகம். நிறைய சிந்திக்கும் ஆற்றலும், அதை செயல்படுத்துவதில் நிறைய சாதூர்யமும் நிறைந்தவர்கள். பெரும்பாலும் இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். இவர்கள் ஜாதகத்தில் புதன்,சுக்கிரன் நன்றாக இருந்தால் இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். நயமாக பேசி வசியப்படுத்தும் பேச்சாற்றல் கொண்டவர்கள்.

இவர்களில் பெரும்பாலோனோர் சிவந்த மேனியை கொண்டிருப்பர். இவர்கள் சுறுசுறுப்பான எண்ணம் கொண்டவர்கள். ஒரு இலட்சியத்தை வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்வார்கள். ஒரு விஷயத்தில் பலன், அல்லது ஆதாயம் இல்லாமல் இறங்க மாட்டார்கள். ஒரு விஷயத்தை பற்றி தெரியவில்லை என்றாலும் அதை கற்று கொள்ளும் ஆர்வம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு வியாபாரத்திற்கு தேவையான நல்ல தகுதியும் திறமையும் இருக்கும். புது புது யுக்திகளை தாங்கள் செய்யும் வியாபாரத்தில் புகுத்தி கொண்டே இருப்பார்கள். நல்ல பண்பும், பிறர் மெச்சும்படியான நல்ல நடத்தையும் கொண்டவர்களாக விளங்குவார்கள்.

இவர்களிடம் பேச்சை விட செயலில் அதிக வேகம் இருக்கும். யாரையும் சார்ந்து வாழ்வது இவர்களுக்கு பிடிக்காது. கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் ஆர்வம் அதிகம் இருக்கும். தெய்வீக பணிகளில் இவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். அயல் நாடுகளுக்கு செல்லும் யோகம் இவர்களில் பல பேருக்கு உண்டு. இசை, எழுத்து, ஆடல், பாடல் என்று ஏதேனும் ஒரு கலையில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். யாரேனும் தவறு செய்தால் அதை முகத்திற்கு நேராக சொல்லி விடுவார்கள். யாராவது உங்களுக்கு உதவி செய்தால் அதை காலத்திற்கும் மறக்க மாட்டார்கள்.

இவர்களின் மத்திய பருவத்தை விட குழந்தை பருவம் அதிக மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கை முழுக்க யோகத்துடன் வாழ்வார்கள். இவர்கள் செய்யும் செயல்களில் திறமைசாலிகள் என்று பெயர் எடுப்பார்கள். வாழ்வின் மத்திய பகுதியில் இவர்கள் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்களை காண்பார்கள். இதனால் நல்ல பேரும், புகழும் பெற்று விளங்குவார்கள். இவர்கள் மனதில் இருக்கும் விஷயங்களை பிறர் அறிந்து கொள்வது கடினம். நெருக்கமானவர்களிடம் மட்டுமே சகஜமாக பேசி பழகுவார்கள்.

இவர்களின் வரக்கூடிய வாழ்க்கை துணை மேற்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து அமையும். இவர்களின் வாழ்க்கைத் துணையானவர் தியாக மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவனிடமும் மிகுந்த ஆசையும், ஈடுபாடும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவராக இருப்பார். பொருளாதாரம் சம்பந்தமான விஷயத்தில் இவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் நல்ல யோகமான காலம் அமையும். திருமண தடை நீங்க முருகனை வழிபாடு செய்து வருவது நன்மையை தரும்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மாசி மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள்

மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் கும்பராசியில் சஞ்சரிக்கும் காலம் மாசி மாதமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தியாக மனபான்மை உள்ளவர்கள். குடும்பத்திலும், சொந்த பந்தங்களிடத்திலும் சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வார்கள். காரியங்களை திட்டம் போட்டு...
ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி

ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி

ஆட்டுக்கால் சூப் தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 4 தனியா தூள் – 2 ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் சீரகத் தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் –...
அட்சதை போடுவது எதற்காக

திருமணத்தில் அட்சதை தூவி வாழ்த்துவது ஏன்?

திருமணத்தில் அட்சதைப் போடுவது ஏன்? திருமணம், சீமந்தம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, கிரகப்பிரவேசம் என எந்த மங்களகரமான நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரியவர்களின் ஆசி அட்சதை மூலமாகத்தான் நமக்கு கிடைக்கிறது. அட்சதையை தூவி ஆசீர்வதிக்கும்...
திருமணத்தில் மாலை மாற்றுதல்

திருமணத்தில் மாலை மாற்றுதல் சடங்கு ஏன் செய்யபடுகிறது?

திருமணத்தில் மாலை மாற்றுதல் ஒரு திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை எண்ணற்ற சடங்குகள் நம் சமுகத்தில் செய்கின்றனர். ஆனால் பல சடங்குகள் ஏன் செய்கின்றனர் என பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று...
தோப்புக்கரணம் பயன்கள்

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள் 

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள்  தோப்புகரணம் போடுவது இன்று உடற்பயிற்சியாக மட்டுமே உள்ளது. ஆனால் அன்றே நம் முன்னோர்கள் விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தினமும் பிள்ளையாருக்கு தோப்புகரணம் போடுவதால்...
துளசி மருத்துவ நன்மைகள்

துளசி மருத்துவ குணங்கள்

துளசி துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கபடுகிறது. துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. துளசி...
4ம் எண்ணின் குணநலன்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 4ம் எண் ராகு பகவானுக்குரிய எண்ணாகும். இந்த எண் எங்கும், எதையும் பிரம்மாண்டமாகவும், பெரிதுப்படுத்தி எண்ணக்கூடிய மாபெரும் ஆற்றல் கொண்ட எண்ணாகும். 4, 13, 22, 31 ஆகிய...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.