லக்னம் என்றால் என்ன? லக்னம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

லக்னம் என்றால் என்ன?

ஒருவரிடம் அவரின் ராசி எதுவென்று கேட்டால் எளிதாக சொல்லி விடுவார்கள். ஆனால் அவரின் லக்னம் என்னவென்று கேட்டால் திணறுவார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் ‘ல’ என்றும் ‘ராசி’ என்றும் ஜோதிடர்கள் குறிப்பிட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். ‘ல’ எனப்படுவது லக்னத்தை குறிக்கும். ராசியானது ஒருவரின் ஜாதகத்தின் உடல் என்றால் லக்னமானது உயிர் ஆகும்.

லக்ன பலன்கள் என்றால் என்ன

லக்னம் என்பது சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடபடுகிறது. ராசி என்பது சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடபடுகிறது. ஒருவர் பிறக்கும் நேரத்தில் வானில் எந்த ராசி உதயமாகி உள்ளதோ, அதாவது பூமியின் சுழற்சிப்படி எந்த ராசியில் பூமி சென்று கொண்டிருக்கிறதோ, அந்த ராசி வீடே ‘லக்னம்’ எனப்படுகிறது.

லக்னத்தை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை முழுமையாக அறிய முடியும். லக்னம் எனப்படும் இடம் தான் ஒரு ஜாதக கட்டத்தில் முதல் வீடு ஆகும். இதில் இருந்து தான் பன்னிரண்டு வீடுகளிலும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க முடியும். பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீடும் ஒருவரின் வாழ்கையின் ஒவ்வொரு துறையையும் முடிவு செய்கிறது.

லக்னம் தான் ஒருவரின் ஆளுமை, சிந்தனை, செயல், அதிர்ஷ்டம், அவரின் வாழ்க்கையில் நடக்க உள்ள நிகழ்ச்சிகளுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. ராசி என்பது லக்னத்துக்கு உறுதுணை செய்யும் ஓர் அமைப்புதான். லக்னமும், ராசியும் இணைந்த தண்டவாளங்கள் போன்றது. இரண்டையும் இணைத்துத்தான் பலன் சொல்ல வேண்டும். அப்போதுதான், அது முழுமையான ஜோதிடப் பலனாக இருக்கும்.

லக்னம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

நமது பூமியானது 360 டிகிரி அளவுகொண்ட வான்வெளி பகுதியாகும். அந்த வான்வெளியை 12 சம பங்குகளாக, அதாவது தலா 30 டிகிரி அளவுள்ள பகுதிகளாக நமது ஞானிகள் மற்றும் ரிஷிகள் பிரித்துள்ளனர்.
இவை முறையே,

1. மேஷ லக்னம்
2. ரிஷப லக்னம்
3. மிதுன லக்னம்
4. கடக லக்னம்
5. சிம்ம லக்னம்
6. கன்னி லக்னம்
7. விருச்சிக லக்னம்
8. துலாம் லக்னம்
9. தனுசு லக்னம்
10. மகர லக்னம்
11. கும்ப லக்னம்
12. மீன லக்னம்

என்று அவற்றின் வடிவங்களை வைத்து 12 லக்னங்களாக பிரித்துள்ளனர்.

லக்னமானது தோராயமாக இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாறி மாறி வரும். சூரியன் ‘மேஷ ராசி’யில் சஞ்சரிக்கும் போது சூரிய உதயத்தில் பிறப்பவர்களின் லக்னம் மேஷ லக்னமாக இருக்கும். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து பிறக்கும் குழந்தையின் லக்னம் ரிஷப லக்னமாக இருக்கும். இப்படி லக்னம் தோராயமாக இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாறிக்கொண்டேயிருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நவகிரக தோஷம் விலக

நவகிரக தோஷம் என்றால் என்ன? நவகிரக தோஷத்திற்கான பரிகாரங்கள்

நவகிரக தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தாலும் கூட, வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்தித்தே தீருவார். கிரக நிலைகள் நன்றாக இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால்,...
நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி

நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி?

நாட்டுக் கோழி குழம்பு நாட்டு கோழி குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. அது உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாட்டு கோழி குழம்பை எவ்வாறு எளிதாக...
how to make aval payasam in tamil

அவல் பாயாசம் செய்வது எப்படி ?

அவல் பாயாசம் தேவையான பொருட்கள் அவல் – 1 கப் வெல்லம் – ½ கப் பால் - 2 கப் ஏலக்காய் தூள்  - சிறிதளவு முந்திரிப்பருப்பு – தேவையான அளவு நெய்...
2ம் எண்ணின் குணநலன்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 2ம் எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 2ம் எண்ணில்...
காகம் கரையும் பலன்கள்

காகம் சொல்லும் சகுனங்கள்

காகம் உணர்த்தும் சகுனம் காகம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் பறவை இனம் ஆகும். இந்து சமயத்தில் காகம் அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. எம லோகத்தின் வாயிலில் காகம் வீற்று இருப்பதாக ஒரு...
ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன

ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்க்க வேண்டும்

ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? ராசி அதிபதி பொருத்தம் என்பது குடும்பம் சந்தோஷமாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் ஆகும். ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும். பிறக்கும் பிள்ளைகள் யோகமாக...
கனவு பலன்கள் வீடு

கட்டிடங்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

கட்டிடங்கள் கனவில் வந்தால் கனவுகள் காணாதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அதற்கேற்றார் போல நாம் நம் தூக்கத்தில் எண்ணற்ற கனவுகளை காண்கிறோம். ஒரு சில சமயங்களில் அதிசயக்க வைக்கும் கனவுகளும் உண்டு. ஆனால் அந்த...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.