வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்?

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்?

தீபம் ஏற்றி வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்றாகும். ஒளி நிறைந்துள்ள இடத்தில் தான் அதிக நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். தினந்தோறும் வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியம், செல்வம், நன்மை, சுபம் மற்றும் தெளிவான அறிவு போன்றவை கிடைக்கும் என்று இந்து மதத்தில் நம்பப்படுகிறது.

வீட்டில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் மேலும், விளக்கேற்றி வழிபடுவதால் தீய சிந்தனைகள், எதிர்மறை ஆற்றல்கள் போன்றவை விலகி அமைதியும், ஆனந்தமும் ஏற்படும்  என்பது ஐதீகம்.

விளக்கேற்றுவதால் வீட்டில் நல்ல வெளிச்சமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரம் கண்டுபிடிக்காத காலங்களில் கோயில்களில் அதிகளவில் விளக்கேற்றி வழிபட்டதால் தான் அங்கு இறைசக்தி நிலைகொண்டு நம் அனைவருக்கும் அருள் புரிகிறது. தற்போதும், அதே நடைமுறை கடைபிடிக்கப்படுவதை கோயில்களில் இன்றும் காணலாம். இந்நிலையில், நமது வீடுகளில் எங்கெங்கு விளக்கு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

வீட்டில் எந்த இடத்தில் விளக்கேற்ற வேண்டும்

  • வீட்டு வாசலில் சாணம் தெளித்து , கோலமிட்டு அதன் நடுவில் விளக்கு ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றுவதால், அந்த வீட்டிற்குள் தெய்வ சக்தியை ஈர்க்கும் தன்மை கிடைக்கும்.
  • வீட்டிற்கு முன்பு நுழைவாயிலின் இரண்டு புறங்களிலும் இருக்கும் விளக்கு மாடத்தில் விளக்கேற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றுவதால் அந்த வீட்டிற்கு தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும்.
  • வீட்டில் விளக்கு மாடம் இல்லாதவர்கள் வீட்டின் நிலைப்படியில் 2 பக்கம் விளக்கு ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றுவதால் அந்த வீட்டில் தெய்வ சக்தி நிலைத்து நிற்கும்.
  • திருமண தோஷம்அடுக்குமாடி குடியிருப்பு, காம்பவுண்ட் வீடு, குடிசை வீடு என எந்த வீடாக இருந்தாலும் வீட்டின் நிலைப்படியில் கண்டிப்பாக விளக்கு ஏற்றுவது நல்லது.
  • அதையடுத்து வீட்டின் முற்றம் என அழைக்கப்படும் பெரிய இடத்தில் விளக்கு ஏற்றுவதால் அங்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
  • அதன் பின்னர், வீட்டின் சமையல் அறையில் விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. அங்கு விளக்கு ஏற்றுவதால், அந்த வீட்டிற்கு அன்ன தோஷம் எதுவும் ஏற்படாது.
  • வீட்டில் பல இடங்களில் விளக்கேற்றி வழிபட வசதி இல்லாதவர்கள் கண்டிப்பாக பூஜை அறையில் விளக்கு ஏற்றுவதால் சர்வ மங்களத்தையும் கொடுக்கும். அனைத்து பலன்களும் கிடைக்கும். எனவே, அவசியம் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவது அந்த வீட்டிற்கு நன்மையை கொடுக்கும்.
  • வீட்டிற்கு பின் பகுதியில் அதாவது, கொல்லைப்புறத்தில் விளக்கேற்றி வழிபட ஆயுள் அதிகரிக்கும்.
  • மாட்டு தொழுவத்தில் விளக்கேற்றி வழிபடுவது பெரும் புண்ணியத்தை கொடுக்கும். ஏனெனில், அங்கே தான் லட்சுமி வாசம் செய்வதால் லட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும், பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும் குடியிருப்பதால், அனைத்து தெய்வங்களின் அருளும், குல தெய்வ அருளும் சேர்ந்து கிடைக்கும்.
  • குப்பை போடும் இடத்தில் விளக்கு ஏற்றினால், துர் தேவதைகள் வாசம் இருக்காது
  • துளசி மாடத்தில் விளக்கேற்றி வழிபட விஷ்ணு பகவானின் அருளால் செழிப்பான வாழ்க்கை நிலை கிடைக்கும்.
  • இதை தவிர வீட்டின் திண்ணை, நடை மற்றும் தோட்டம் போன்ற இடங்களிலும் விளக்கேற்றி வழிபடுவதால் பெரும் சிறப்பு கிடைக்கும்.
  • ஒரு வீட்டில் இருக்கும் அனைத்து இடங்களிலும் இவ்வாறாக தினந்தோறும் விளக்கேற்றி வழிபடுவது என்பது சாத்தியமில்லாததாகும் என்பதால், வருடத்திற்கு ஒரு முறையாவது அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

pineapple kesari recipe

பைனாப்பிள்  கேசரி செய்முறை

பைனாப்பிள்  கேசரி செய்முறை  தேவையான பொருட்கள் ரவை – 1 கப் சர்க்கரை – ¾ கப் தண்ணீர் – 2 கப் கேசரி கலர் - சிறிதளவு அன்னாசிபழத் துண்டுகள் – ½...
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பரணி நட்சத்திரத்தின் இராசி : மேஷம் பரணி நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பரணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை – துர்க்கை பரணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
இறால் சீஸ் ரோல்

இறால் சீஸ் ரோல் – Prawn Cheese Roll

இறால் சீஸ் ரோல் இறால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறால் உணவு பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம் இது சுவை, மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகவும் திகழ்கிறது....
தொடை கறி

ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி தேவையான பொருட்கள் மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ வினிகர் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 ஸ்பூன் ...
துளசி மருத்துவ நன்மைகள்

துளசி மருத்துவ குணங்கள்

துளசி துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கபடுகிறது. துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. துளசி...
27 நட்சத்திரங்களும் கோவில்களும்

27 நட்சத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும்

27 நக்ஷத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும் நக்ஷத்திரங்கள் 27 என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ல் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் ஒரு கோயில் உண்டு. மேற்படி அவரவர் நக்ஷத்திரத்திற்கு உரிய கோயிலை தரிசித்தால் எண்ணற்ற நன்மைகளை வாழ்வில்...
சிவராத்திரி பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மஹா சிவராத்திரி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மார்ச் 1 ஆம் தேதி மஹா சிவராத்திரி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.