மச்ச சாஸ்திரம் என்றால் என்ன? மச்ச பலன்களை எவ்வாறு கணிப்பது

மச்சம் என்றால் என்ன?

நமது உடலில் தலையில் இருந்து கால் பாதம் வரை உள்ள தோலில் அமைந்துள்ள சிறு சிறு புள்ளிகள் தான் மச்சங்கள் ஆகும். இது மஞ்சள், நீலம், சிவப்பு, வெளுப்பு, கருப்பு போன்ற ஏதாவது ஒரு நிறமாகவோ அல்லது பல நிறத்திலோ இருக்கும். அது போல இதன் அளவுகள் கூட வேறு வேறாக இருக்கும். எடுத்துகாட்டாக கடுகை போல சிறிதாகவோ, அல்லது அதற்கு மேல் பெரிதாகவோ இருக்கும்.

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன

இந்த மச்சங்கள் ஒரு சிலருக்கு பிறக்கும் போதே இருக்கும். இன்னும் ஒரு சிலருக்கு பிறக்கும்போது சிறியதாக இருந்து நாளடைவில் வளர்வது உண்டு. மேலும் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது இருக்கும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாக இருக்கும். இவை பிறப்பிலிருந்து இறப்பு வரை உடலில் இருந்து மறையாது என்பதால் அரசு ஆவணங்களில் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும்.

எவையெல்லாம் மச்சங்கள் கிடையாது

சிலருக்கு காயங்கள், புண்கள் அம்மை போன்றவைகளால் மச்சங்கள் போன்ற தடங்கள் இருக்கும். ஆனால் இவ்வாறு உண்டானவை உண்மையில் மச்சங்கள் கிடையாது. ஏனெனில் இவ்வாறு தோன்றுபவை நிரந்தரமாக இருக்காது. நாளடைவில் மறைந்து போகலாம்.

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன?

பழங்கால சாஸ்திர முறைகளில் நமது உடலில் மச்சங்கள் உண்டாகும் இடங்களின் அடிப்படையில் பல பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திர வகையாகும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம்‚ பதவி‚ சொத்து சேர்க்கை‚ ஆடம்பர வாழ்க்கை ஏற்படும் போது அவர்களை பேச்சு வழக்கில் ‘மச்சக்காரன்’ என்பார்கள். கஷ்டப்பட்டு உழைக்கமலேயே இந்த வசதி வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்திருக்கும்.

ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் வந்து விட்டாலோ அல்லது ஒரு சிலருக்கு நிறைய பெண் மற்றும் ஆண்நண்பர்கள் இருந்தாலோ ‘மச்சக்காரன்’, ‘மச்சக்காரி’ என்பார்கள். அப்படி சொல்பவர்கள் பொறாமையின் காரணமாக இதை சொன்னாலும் அதுவும் ஒரு வகையில் உண்மை தான். நமது உடலில் ஏற்படும் மச்சங்கள் நமக்கு அதிர்ஷ்டத்தையும், துரதிர்ஷ்டத்தையும் கூட வழங்குகிறது. இந்த உண்மையைக் கண்டறிந்து அதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தான் மச்ச சாஸ்திரம் ஆகும்.

மச்ச பலன்கள்

இன்றைய கால கட்டத்தில் மச்ச சாஸ்திரம் குறித்து ஒரு சில நூல்களே உள்ளன. தவிர இந்த மச்சங்களைக் கொண்டும் அது இருக்கும் இடத்தைக் கொண்டும் ஒருவரது குண நலன்களை நாம் அறிந்து கொள்ளலாம். அதன் அடிப்படையில் பார்க்கும் போது, ஆண்களுக்கு இடது புறமுள்ள மச்சங்களும் பெண்களுக்கு வலது புறமுள்ள மச்சங்களும் பாதகமான பலன்களைத் தரக் கூடியது என்று மச்ச சாஸ்த்திரம் கூறிகிறது.

மச்சத்தை வைத்து எவ்வாறு பலன் சொல்வது

ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் உடலில் வலது மற்றும் இடது பக்கத்தில் எத்தனை மச்சங்கள் உள்ளது என்பதை அறிந்து கொள்வது நல்லது. ஆண்களுக்கு வலது பக்கத்திலும்‚ பெண்களுக்கு இடது பக்கத்திலும் மச்சம் இருந்தால் யோகம் உண்டாகும். பெரும்பாலும் மச்சங்களை வைத்துப் பலன் சொல்லும் போது, ஒரே மச்சம் ஒரு இடத்தில் இருந்தால் ஆண்களுக்கு ஒரு பலனும், பெண்களுக்கு வேறு பலனும் சொல்வார்கள். அதாவது ஆண், பெண் என இருவருக்கும் ஒரே இடத்தில் இருக்கும் மச்சம் வெவ்வேறு வித்தியாசமான பலன்களைத் தரக் கூடியது.

ஆண் பெண் மச்ச பலன்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆட்டு தல கறி குழம்பு

தலைக் கறிக்குழம்பு

தலைக் கறிக்குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுத்தலை – 1 தேங்காய் – ½ கப் சின்ன வெங்காயம் – 1 கப் தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள்...

வசியப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

வசியப் பொருத்தம் என்றால் என்ன? வசியப் பொருத்தம் என்பது கணவன், மனைவி இருவருக்கும் வசியத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் பூரண அன்புடன், ஒருவருக்கொருவர் இன்பமுடன் வாழ்வார்களா என்பதை அறிய பார்க்கப்படும் ஒரு பொருத்தம் ஆகும்....
ஆண் கால் பகுதி மச்சத்தின் பலன்கள்

ஆண் கால் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கால்கள் மச்ச பலன்கள் உடலில் ஒவ்வொரு பாகத்தில் தோன்றும் மச்சங்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை மச்ச சாஸ்திரம் என்னும் நூல் விளக்குகிறது. அந்த வகையில் ஆணின் கால் பகுதியில் எந்த இடத்தில்...
தேங்காயில் குடுமி ஏன் வைக்க வேண்டும்

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா?

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா நாம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பதற்கு தேங்காய், பூ, பழம், கொண்டு முதலானவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு சாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது தேங்காயை...
ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை ஓரிதழ்த்தாமரை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. வயல்வெளிகள், பாழ் நிலங்கள், களர் நிலங்களிலும் சாதாரணமாகக் வளரும். ஈரப்பதம் மிக்க இடங்களில் வளரும். இது நீளமான இலைகளை உடையது. ஓரிதழ்த்தாமரை இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை. இது...
நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி

நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி?

நாட்டுக் கோழி குழம்பு நாட்டு கோழி குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. அது உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாட்டு கோழி குழம்பை எவ்வாறு எளிதாக...
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.