அன்னாபிஷேகம் சிறப்புகள் மற்றும் பலன்கள்

அன்னாபிஷேகம் சிறப்புகள்

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.  இந்த ஆண்டு 07.11.2022 அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

இந்த உலகில் சகலத்தையும் படைத்து அதற்கான உணவையும் கொடுத்து காத்து ரட்சிக்கும் ஈசனுக்கு உணவையே அபிஷேகமாக அளித்துக் கொண்டாடப்படும் விழாவே அன்னாபிஷேக விழாவாகும்.

அன்னாபிஷேகம் செய்யும் முறை அன்னாபிஷேகத்தில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பருக்கையிலும் இறைவனுடைய அற்புத ரூபத்தை தரிசிக்கின்ற நாள் எது என்றால் இந்த ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேக நாள் தான். உணவு என்பது இறைவனுக்கு சமமானது. எனவே உணவை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த அன்னாபிஷேக விழா கொண்டாடப்படுகிறது.

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடத்தபடுகிறது. இந்த நாளில் சிவபெருமானை தரிசித்தால் ஈசனின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்கும்.

ஒவ்வொரு மாதம் வரும் பௌர்ணமி அன்று ஒவ்வொரு நடசத்திரத்திற்கு  உரிய பொருளால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷமானதாகும். ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று  அஸ்வினி நட்சத்திரம் இருப்பதால் அஸ்வினி நட்ச்சத்திரத்திற்கு உரிய அன்னத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

அன்னாபிஷேகத்தின் போது சிவலிங்கம் முழுமையாக அன்னத்தினால் மூடி அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். தற்போது அன்னத்தோடு காய்கறிகளையும் சேர்த்து சிவனுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த இந்த அன்னத்தை ஒரு பருக்கை கூட வீணாக்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகத் தான் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

சிவ பெருமான் அபிஷேக பிரியர் ஆவார். இவருக்கு ஐப்பசி பெளர்ணமி  தினத்தில் தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள் மற்றும் அன்னம் போன்ற பல பொருட்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து இறைவனின் அருளை பெறுகிறோம்.

இந்த அன்னாபிஷேகத்தில் அலங்காரம் செய்யப்பட்ட அன்னம் இரண்டு நாழிகை அதாவது ஒன்றரை மணி நேரம் அப்படியே வைத்திருப்பார்கள். அந்த நேரத்தில் யஜுர் வேத பாராயணம், ருத்திரம், சமகம் ஆகியவை பாராயணம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

அன்னாபிஷேக பலன்கள் 

‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதற்கு அர்த்தம் சிவபெருமானை அன்னாபிஷேக அலங்காரத்தில் கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்பதை உணர்த்துவதாகும்.

அன்னாபிஷேகம் செய்வது எப்படி அன்னாபிஷேகத்தை கண்டால் தீராத தோஷங்கள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பிரச்சனைகள் தீரும். லாபம் பெருகும். அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.

அன்னாபிஷேகத்தன்று அவரவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவன் கோவில்களுக்கு சென்று சிவபெருமானை அன்னதிருமேனியில் வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்னாபிஷேகத்தில் உங்களின் பங்கும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அன்னபிஷேகத்திற்கு முந்தைய நாளே உங்களால் முடிந்த அளவு பச்சரிசியை வாங்கி கொடுக்கலாம். சிவனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தில் நீங்கள் வாங்கி கொடுத்த அரிசியில் ஒரு பருக்கை இருந்தாலும் அது உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் பரம்பரைக்கே கோடி புண்ணியமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

இலந்தை பழம் மருத்துவ நன்மைகள்

இலந்தை பழம் மருத்துவ பயன்கள்

இலந்தை பழம் இலந்தை பழம் சீனாவை தாயகமாக கொண்டது. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு...
tamil puzzles with answers

Riddles with Answers | Brain Teasers and Puzzles | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கும்ப லக்னத்தின் அதிபதி சனி பகவனாவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் சற்று உயரமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல கவர்ச்சியான, மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். தெய்வ பக்தியும்,...
சஷ்டி திதி பலன்கள்

சஷ்டி திதி பலன்கள், சஷ்டி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

சஷ்டி திதி சஷ்டி என்றால் ஆறு. இது முருகப் பெருமானுக்குரிய திதியாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஆறாவது நாள் சஷ்டி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சஷ்டியை சுக்கில பட்ச சஷ்டி...
ஷாக் அடித்தால் என்ன செய்ய வேண்டும்

முதலுதவி பெட்டி யும் அதில் இருக்க வேண்டிய முதலுதவி பொருட்களும்

முதலுதவி பெட்டி முதலுதவி செய்ய மிகவும் முக்கியம் முக்கிய பொருட்கள் நிறைந்த முதல் உதவிப் பெட்டி ஆகும். காயமடைந்தவருக்கு முதன்மையான உதவிகளை செய்வதற்காக சில அத்தியாவசிய மருத்துவப்பொருட்களை கொண்டுள்ள பெட்டியே முதலுதவிப்பெட்டி ஆகும். இது...
லிப்ஸ்டிக் பாதிப்புகள்

லிப்ஸ்டிக் போடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

லிப்ஸ்டிக் இன்று பலரும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள பயன்படுத்தப்படும் ஒரு தவிர்க்க முடியாத அழகு சாதன பொருளாக லிப்ஸ்டிக் மாறியுள்ளது. முன்பெல்லாம் எங்கோ ஒருவர் தான் லிப்ஸ்டிக்கை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால்...
தொடை கறி

ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி தேவையான பொருட்கள் மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ வினிகர் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 ஸ்பூன் ...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.