அத்திப்பழம் பயன்கள் | அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

அத்திப்பழம்

அத்திப்பழம் மரம் ‘மோரேசி’ Moraceae என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அத்தியின் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். அத்திப்பழம் ஆங்கிலத்தில் ‘fig’ என அழைக்கபடுகிறது. அத்திமரம் களிமண் நிலம் மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் நன்கு வளரும் தன்மையுடையது. அத்தி மரத்தில் பூவும் விதைகளும் சேர்ந்து பழம் போன்ற தோற்றத்தைத் தருகிறது.

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்

அத்திப்பழத்தில் புதியதை விட நன்றாக காய்ந்த அல்ல‍து உலரந்த அத்திபழங்களில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. அத்தி பழத்தை சாப்பிட்டால் உடல் வலிமை அதிகரிப்பது மட்டுமில்லாமல், தலை முதல் கால் வரை உடல் முழுக்க ஆரோக்கியத்திற்கும்ம் உதவி புரியும். துணை நிற்கும் சிறந்த உணவுகளில் அத்திப்பழமும் ஒன்று. அத்திபழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலில் உள்ள பல நோய்கள் எளிதில் குணமாகிறது.

அத்தி மரத்தின் அமைப்பு

அத்தி மரம் வகையைச் சேர்ந்தது. அத்தி நடுத்தர உயரமுடைய மரமாகும். அத்திமரம் சுமார் 10 மீட்டர் வரை வளரும். அத்தி மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும். அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் காய்க்கும். பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக பச்சை நிறத்தில் இருக்கும். அத்தி காய் பழுத்த பின் கொய்யா பழம் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும்.

அத்தி வகைகள்

அத்தியில் நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகைகள் உண்டு.

அத்திப்பழம் நன்மைகள்

அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள்

அத்தி பழத்தில் கலோரி – 47%, புரத சத்து – 4 கிராம், நார்ச்சத்து – 2 கிராம், இரும்பு சத்து – 4 மில்லி கிராம், தயாமின் – 0.10 மில்லி கிராம், கால்சியம் – 16 மில்லி கிராம், பொட்டாசியம் – 129 மில்லி கிராம், சோடியம் – 2 மில்லி கிராம் அடங்கியுள்ளன.

அத்திபழத்தின் மருத்துவ குணங்கள்:-

உடலில் புதிய இரத்தம் உருவாகும்

பார்க்கவும், ருசிக்கவும் அத்திப்பழம் சற்று வினோதமாக இருப்பினும், உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து ஆரோக்கியமான தேகத்தை பெறலாம்.

இதயம் வலுவடையும்

அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து , காலை, மாலை இரண்டு வேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை அடையும்.

உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்

உணவை எளிதில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பை தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள நச்சுகளையும் நீக்குகிறது.

துர்நாற்றத்தை போக்குகிறது

அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளரும். அத்தி காய்களில் இருக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவி வந்தால் வாய்ப்புண்கள் குணமாகும்.

தோல் நோய்களை குணமாக்கும்

1/2 கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளையாவது சாப்பிட்டு வந்தால் தோள்களில் தோன்றும் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், நிறமாற்றம் போன்றவை குணமாகும்.

ஆண்மை அதிகரிக்கும்

தினசரி 5 அத்திப்பழம் காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி தாது விருத்தியாடையும். ஆண்மலட்டு தன்மை நீங்கும்.

கல்லீரல் வீக்கத்தை குறைக்கும்

போதைப் பழக்கம் மற்றும் இதர நோய்களால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக அத்திப் பழங்களைக் வினிகரில் ஒருவாரம் ஊற வைத்து, பின்பு தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்சனைகள் நீங்கும்.

உலர் அத்திப்பழம்

மலசிக்கலை குணமாக்கும்

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கலை குணமாக்க தினமும் 5 அத்திப்பழங்களை இரவில் சாப்பிட்டு வரவேண்டும்.

குறிப்பு:-

1. உலர்ந்த அத்திப்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அத்திப்பழத்தை அதிகமாக உட்கொண்டால் உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
2. அத்திப்பழத்தை அதிகமாக உட்கொண்டால், அவை நம் உடலின் தேவையற்ற கழிவாகவே சேருகிறது. இதனால் எண்ணற்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஏலக்காய் தண்ணீர் குடிப்பதினால் உண்டாகும் நன்மைகள்

ஏலக்காய் தண்ணீர் பயன்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த ஒரு அறிய மருந்து தான் ஏலக்காய். ஏலக்காய் நம் அனைவரின் வீட்டிலும் இருக்கக் கூடிய ஒரு அறிய மருத்துவ குணம்...
அஷ்டமி நவமி திதிகள்

அஷ்டமி, நவமி திதிகள் ஏன் மக்களால் புறகணிக்கப்டுகின்றன

அஷ்டமி, நவமி திதிகள் அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களுக்கு பிறகு வரும் 8வது நாள் அஷ்டமி, 9வது நாள் நவமி ஆகும். அஷ்டமி, நவமி வரும் திதிகளில் நல்ல காரியங்கள் செய்ய கூடாது, அல்லது...
ஜாதக யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #9

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து ஜோதிடரால் கணிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
தண்ணீர்

ஸ்லிம்மான அழகிய உடல் அமைப்பை பெற சில எளிய டிப்ஸ்

அழகான உடல் அமைப்பை பெற எளிய டிப்ஸ்  உடல் எடை அதிகரிப்பால் இன்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் அனைவரும் எதிர்ப்பார்ப்பது மெலிந்த அழகான உடல் அமைப்பை தான். நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை...
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மகம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மகம் நட்சத்திரத்தின் அதிபதி : கேது மகம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சூரியன் மகம் நட்சத்திரத்தின் நட்சத்திர தேவதை : சூரியன் மகம் நட்சத்திரத்தின் பரிகார...
சுப யோகங்கள்

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் உள்ளதா? யோகங்கள் பகுதி #2

யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் ஒன்றினைவதால் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். அவ்வாறான சில கிரக சேர்க்கைகள் நல்ல பலனையும் தரலாம், அல்லது தீய பலனையும்...
தூதுவளை நன்மைகள்

தூதுவளை மருத்துவ குணங்கள்

தூதுவளை தூதுவளை என்பது உணவிலும் மருத்துவத்திலும் அதிகம் பயன்படும் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை கொடியாகும். சித்தர்கள் சுட்டிக்காட்டியுள்ள காயகற்ப மூலிகைகளில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.