சுவையான செட்டிநாடு சில்லி இறால் – Chettinadu Chilli Iraal

செட்டிநாடு சில்லி இறால் (Chettinadu Chilli Iraal)

இறாலை வைத்து செய்யப்படும் நாவு வகைகள் சுவை மிகுந்தவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறாலை விரும்பி சாப்பிட காரணம் அது சத்தானது, சுவை மிகுந்தது, மற்றும் எலும்பில்லாதது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இறாலை வைத்து செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது என பார்ப்போம்.

செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது

சில்லி இறால் செய்ய தேவையான பொருட்கள்,

  1. இறால் – ½ கிலோ
  2. மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
  3. தக்காளி – 1
  4. மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
  5. சோம்பு பொடி – ½ ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  7. வெங்காயம் – 2
  8. பச்சை மிளகாய் – 3
  9. கறிவேப்பிலை – சிறிதளவு
  10. எண்ணெய் – தேவையான அளவு
  11. உப்பு – தேவையான அளவு

செய்முறை

  1. முதலில் இறாலை தோல் நீக்கி நடுவில் உள்ள குடலை எடுத்து விட்டு சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும்.
  2. பிறகு அதனுடன் மிளகாய் தூள் , சோம்பு தூள் , தேவையான அளவு உப்பு , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  3. வெங்காயம், தக்காளியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து கொஞ்சம் எண்ணை ஊற்றி ஊற வைத்துள்ள இறால் மசாலாவை சேர்த்து வதக்க வேண்டும்.
  6. மிதமான தீயில் வைத்து வதக்கவும், வதக்கும் பொழுது இறாலில் இருந்து தண்ணீர் விடும், அந்த தண்ணீர் முற்றிலும் வற்றும் வரை அடுப்பில் வைத்து கிளறவும்.
  7. இறால் ஓரளவிற்கு வவதங்கியதும் வெளியே எடுத்துவிடவும்.
  8. அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  9. இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் வதக்கி வைத்துள்ள இறாலை சேர்க்கவும்.
  10. இறாலை சேர்த்து 10 நிமிடத்திற்கு நன்கு வேக விடவும்.
  11. பின் கடைசியாக கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான செட்டிநாடு சில்லி இறால் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தொடை கறி

ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி தேவையான பொருட்கள் மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ வினிகர் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 ஸ்பூன் ...
முசுமுசுக்கை கீரை பயன்கள்

சுவாச பிரச்சனைகளை நீக்கும் அற்புத சக்தி கொண்ட முசுமுசுக்கை கீரை

முசுமுசுக்கை கீரை முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக படர்ந்து வளர்ந்திருக்கும். முசுமுசுக்கை செடியின் இலை, மற்றும் தண்டுகளில் சிறிய...
1ம் எண்ணில் பிறந்தவர்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 1ம் எண் சூரிய பகவானுக்கு உரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். முதலாம் எண்ணில்...
கார்த்திகையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் 8வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் கற்றது கள்ளவு...
மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மகர லக்னத்தின் அதிபதி சனி பகவனாவார். மகர லக்கினத்தில் பிறந்தவர்கள் சாமர்த்தியசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். மனதிடம் அதிகம் உள்ளவர்கள். கடினமாக உழைக்ககூடியவர்கள். எப்போதும் கம்பீரமும் புன்னகையுமாக வலம் வருவார்கள்....
சோம்பு தண்ணீர் நன்மைகள்

தினமும் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் சித்த மருத்துவத்தில் சோம்பு ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடித்து வந்தால் இரத்தில் இருக்கக்கூடிய அழுத்தத்தையும்,  இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த...
திதி என்றால் என்ன

திதிகள் என்றால் என்ன? அவை யாவை?

பஞ்சாங்கமும், திதிகளும் நமது தினசரி வாழ்க்கையில், ஒரு நாளை துவங்கும் போதே அந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் எல்லா நாட்களும் அவ்வாறு இனிய நாளாக அமைவதில்லை. ஒவ்வொரு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.