இராகு கேது தோஷம் என்றால் என்ன? இராகு கேது தோஷ பரிகாரங்கள்

இராகு கேது தோஷம்

ராகு மற்றும் கேது ஜோதிடத்தில் நிழல் கிரகங்கள் என கூறப்படுகின்றன. ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக இருந்தாலும் மிகவும் வலிமை வாய்ந்தவையாகும். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் கேது எந்த கிரகங்களுடன் சேர்ந்து இருக்கிறதோ, அந்த கிரகத்தின் குணத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை ஆகும். ராகு மற்றும் கேது நல்ல கிரகங்களுடன் இருந்தால் நல்ல பலனையும், தீய கிரகங்களுடன் இருந்தால் தீய பலனையும் அளிக்கும் குணமுடையவை ஆகும்.

நாக தோஷம் நீங்க

ராகு – கேது தோஷம் ஏன் ஏற்படுகிறது?

வயதான பெண்களை சரியாக கவனிக்காமல் கொடுமைப்படுத்தினால் அவர்களின் தலைமுறைக்கு இராகு கேது தோஷம் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறாமல் தள்ளி போகிறது. மேலும் களத்திர ஸ்தானத்தில் ராகு ஜென்மத்தில் கேதுவாக மாறி கெடுதலைச் செய்கிறது. கோவில் இடங்களை ஆக்கிரமித்து ஆண்டவனின் கோபத்திற்கு ஆளானால் இந்த தோஷம் ஏற்படலாம்.

குடும்பங்களை பிரித்து வயதானவர்களிடம் சாபம் வாங்கினால் சாபம் நிறைவேற குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டமத்தில் கேதுவும் இருந்து இல்வாழ்க்கையை நிம்மதி இல்லாமல் இந்த இராகு கேது கெடுக்கும். சகோதரர்களை மதிக்காமலும், உண்மை பாசத்தை உதறித்தள்ளி கைவிட்டாலோ அல்லது அவர்களை ஏமாற்றினாலோ அவர்கள் கொடுத்த சாபம் காரணமாக ஒருவருக்கு 3வது வீட்டில் ராகுவும், தர்ம கர்மா ஸ்தானமான 9-ம் வீட்டில் கேதுவும் இருக்கும்.

சர்ப்ப தோஷங்களின் வகைகள்

இராகு கேது தோஷம் என்ன செய்யும்

ஒருவரது ஜாதகத்தில் ராகு – கேது தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும். தொழிலில் முடக்கம் ஏற்படும். உடல் பல நோய்களால் பாதிக்கபடும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்படும்.

ராகு கேது தோஷ பரிகாரங்கள்

ராகு மற்றும் கேது தோஷத்திற்கு பொதுவான பரிகாரமாக தோஷத்தின் வீரியம் குறைய, பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வாருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ராகு மற்றும் கேது எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார்களோ அந்த நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வது நல்லது. பாம்பின் மேல் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் கோயிலில் பரிகாரம் செய்துகொள்வதும் நல்லது.

நவகிரக தோஷ பரிகாரகங்கள்

சுவாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரம் வரும் தினங்களில், அருகில் உள்ள சிவன் கோயிலில் பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால், ராகு கேதுவின் வீரியம் குறையும். பாம்பை அடித்துக் கொன்றவர்கள், பாம்புப் புற்றை இடித்தவர்கள் இந்த தோஷத்தின் பிடியில் இருப்பார்கள். அவர்கள் ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றுவது அல்லது நாகர் சிலைக்கு பால் அபிஷேகம், மஞ்சள் காப்பிட்டு வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

கேது பகவான் அருள் பெற விநாயகர், சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு என்று தனி கோவில் உள்ளது. அங்கு கேது பரிகார பூஜை செய்யலாம்.

பாம்பு புற்று இருக்கும் அனைத்து அம்மன், காளி கோவில்களிலும் ராகு பரிகார பூஜைகள் செய்யலாம். நவகிரகத்தில் உள்ள ராகு கேதுவுக்கும் விளக்கேற்றலாம். சிவன் கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும். பெருமாள் கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை புதன்கிழமை ராகுகாலத்திலும் வணங்குவது நல்லது. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள், அர்ச்சனை செய்து வழிபடவும். தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபாடு செய்யலாம்.

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபடலாம். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடவும். பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வழிபடலாம். பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம். ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை ஒருபொழுது மட்டும் விரதம் இருக்கலாம்.

ராகு – கேதுக்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும்

செவ்வாய் திசையில் ராகு புத்தி, கேது புத்தி நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். ராகு திசையில் ராகு புத்தி, கேது புத்தி நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். சந்திரதிசையில் ராகு புத்தி, ராகு அந்தரம் கேது புத்தி, கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். குரு திசையில், கேது புத்தி ராகு புத்தி நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்.

நாக தோஷ பரிகார தலங்கள்

சூரிய திசையில், எந்த புத்தி நடந்தாலும், அதில் ராகு அல்லது கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். சனி திசையில் ராகு, கேது புத்தி-சூரிய புத்தியில் ராகு, கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். கேது திசையில் சந்திர புத்தி, சூரிய புத்தி, புதன் புத்தியில் ராகு-கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். புதன் திசையில் சந்திர – புத்தி, ராகு – கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்.

ராகு கேது தோஷ பரிகார ஸ்தலங்கள்

1. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும்.
2. கும்பகோணம் அருகே உள்ள கீழ்பெரும்பள்ளம் கேது ஸ்தலமாகும்.
3. சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகு மற்றும் கேதுகென்று சிறப்பான பரிகாரங்கள் செய்யபடுகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை ஓரிதழ்த்தாமரை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. வயல்வெளிகள், பாழ் நிலங்கள், களர் நிலங்களிலும் சாதாரணமாகக் வளரும். ஈரப்பதம் மிக்க இடங்களில் வளரும். இது நீளமான இலைகளை உடையது. ஓரிதழ்த்தாமரை இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை. இது...
சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ் பலரும் விதவிதமாக சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புவர். அதில் ஒன்றுதான் சிக்கன் நூடுல்ஸ். தற்போது பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு கடைகளில் இந்த சிக்கன் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். சிறுவர்கள்...
தார தோஷம் நீங்க

தார தோஷம் என்றால் என்ன? தார தோஷத்திற்கான பரிகாரம்

தார தோஷம் என்றால் என்ன? தாரம் என்றால் வாழ்க்கை துணையை குறிக்கும். அதாவது மனைவியையோ அல்லது கணவனையோ குறிப்பது ஆகும். ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2வது ஸ்தானத்திலோ அல்லது 7வது ஸ்தானமான கணவன்...
சதுர்த்தி திதி

சதுர்த்தி திதி பலன்கள், சதுர்த்தி திதியில் செய்ய வேண்டியவை

சதுர்த்தி திதி சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு...
புரட்டாசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவு மற்றும் திறமையுடன் ஞான மிக்கவராக இருப்பார்கள். இவர்கள் எளிதில் எவற்றையும் கற்கும் திறமை கொண்டவர்கள். சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள். இம்மாதத்தில் பிறந்தவர்கள்...
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திராடம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு மற்றும் மகரம் உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன் உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் இராசி அதிபதி (தனுசு) : குரு உத்திராடம் நட்சத்திரத்தின் 2,...
ஆரத்தி எடுக்கபடுவது ஏன்

திருமணத்தில் ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்?

ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்? திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்களை அரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைக்கும் நடைமுறை காலம் காலமாக நமது வழக்கத்தில் உள்ளது. ஏன் ஆரத்தி எடுக்கிறார்கள் என பலருக்கும் தெரிவதில்லை. பலரும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.