புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவு மற்றும் திறமையுடன் ஞான மிக்கவராக இருப்பார்கள். இவர்கள் எளிதில் எவற்றையும் கற்கும் திறமை கொண்டவர்கள். சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள். இம்மாதத்தில் பிறந்தவர்கள் படிக்காதவராக இருந்தாலும் பல விஷயங்களில் மேதைகளாக இருப்பார்கள்.

புரட்டாசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் படித்தவர்களாக இருந்தால் பெரிய பட்டதாரி, டாக்டர், இஞ்சினியர், மற்றும் விஞ்ஞானிகளாகவும் விளங்குவார்கள். கல்வியிலும் இவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. அறிவியல் துறையில் ஈடுபட்டால் இவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புத்தகம் படிப்பதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்களிடம் சில குறைகளும் உண்டு. இயற்கையாகவே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருந்தும்கூட ஒரு லட்சியத்தை மனதில் நினைத்தால் அதை முடிக்க இறுதி வரை போராட மாட்டார்கள். இவர்களுக்குரிய திறமை இவர்களுக்கே தெரியாமல் போய்விடுவது தான் பெரிய குறையாகும். இவர்கள் சந்தேக குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தன் உழைப்பாலும், திறமையாலும் சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். இவர்கள் நல்ல பேச்சாளர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பார்கள். எந்த காரியத்தை எடுத்து கொண்டாலும் அதை எளிதில் முடிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுறுசுறுப்பானவர்கள். தன் முயற்சியால் பல செயல்களை செய்து வெற்றி காண்பார்கள்.

இவர்களிடம் கற்பனை சக்தியும், தத்துவங்களும் நிறைந்து காணப்படும். இவர்கள் மற்றவர்களைப் போல நடித்து காட்டுவதில் வல்லவர்கள். எந்த ஒரு விஷயத்திலும் ஆழ்ந்து சிந்திக்காமல் அதில் தலையிடமாட்டார்கள். எதையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். மற்றவர்கள் செய்யும் குற்றம் குறைகளை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். அதை ஒளிவு மறைவின்றி சாமர்த்தியமாக எடுத்துக் கூறுவார்கள்.

இவர்கள் கிடைப்பதே போதும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் கிடைக்க போகும் பெரிய லாபத்தை விட்டு விடுவார்கள். இதையெல்லாம் தவிர்த்து ஒரு லட்சியத்துடன் வாழ்ந்தால் இந்த மாதத்தில் பிறந்தவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். மற்றவர்கள் எளிதில் செய்யக்கூடிய தவறுகளை கூட நிகழாவண்ணம் நடந்துகொள்வர்கள். மற்றவர்களுடைய முன்னேற்றத்திற்குத் தன்னலமற்றுப் பாடுபடுவார்கள். பிறரைப் புகழ்ந்து பேசியோ அல்லது குறுக்கு வழிகளைக் உபயோகித்து காரியத்தைச் சாதிப்பது என்பது இவர்களுக்குப் பிடிக்காது.

மற்றவருக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குவர்கள். சூழ்நிலைக்கேற்றவாறு தம் கொள்கைகளை மாற்றிக்கொள்வார்கள். எந்த காரியத்தையும் எளிதில் சாதித்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள். நேரத்தை வீணாக்காமல் இயந்திரம் சுழன்று குறிப்பிட்ட காலவரம்பிற்குள் செய்வதைத் திருந்தச் செய்வார்கள்.

யாராவது தவறு செய்தால் அவர்களை தட்டிக் கேட்கும் குணம் இவர்களிடம் உண்டு. அத்துடன் திரும்பவும் அந்த தவறை செய்யாமல் இவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இயற்கை எழில் மிகுந்த இடங்களுக்கு சுற்றலா சென்று வருவதில் இவர்களுக்கு அதிக விருப்பம் இருக்கும். இவர்களுக்கு எல்லா உணவுகளையும் சாப்பிடுவதில் விருப்பம் அதிகம். இதைத் தவிர்த்து சத்தான உணவுகளை அளவோடு சாப்பிட்டால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

வசியப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

வசியப் பொருத்தம் என்றால் என்ன? வசியப் பொருத்தம் என்பது கணவன், மனைவி இருவருக்கும் வசியத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் பூரண அன்புடன், ஒருவருக்கொருவர் இன்பமுடன் வாழ்வார்களா என்பதை அறிய பார்க்கப்படும் ஒரு பொருத்தம் ஆகும்....
விஜயதசமி சிறப்புகள்

விஜயதசமி வழிபாட்டின் பலன்கள் மற்றும் பயன்கள்

விஜயதசமி வழிபாடு அகில உலகத்தையும் காக்கக்கூடிய அம்பிகையானவள்  சக்தி, லக்ஷ்மி, சரஸ்வதி என மூன்று தேவிகளின்  சொருபமாக அவதரித்து மகிஷாசுரன் என்ற அரக்கனிடம் 9 நாட்கள் போர் புரிந்து பின் 10 வது நாளில்...
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரேவதி நட்சத்திரத்தின் இராசி : மீனம் ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி : புதன் ரேவதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு ரேவதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஈஸ்வரன் ரேவதி நட்சத்திரத்தின் பரிகாரத்...
தூதுவளை நன்மைகள்

தூதுவளை மருத்துவ குணங்கள்

தூதுவளை தூதுவளை என்பது உணவிலும் மருத்துவத்திலும் அதிகம் பயன்படும் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை கொடியாகும். சித்தர்கள் சுட்டிக்காட்டியுள்ள காயகற்ப மூலிகைகளில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை...
ஜோதிடத்தில் யோகங்கள்

யோகங்கள் என்றால் என்ன? பலவகையான ஜாதக யோகங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...
சுப யோகங்கள்

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் உள்ளதா? யோகங்கள் பகுதி #2

யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் ஒன்றினைவதால் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். அவ்வாறான சில கிரக சேர்க்கைகள் நல்ல பலனையும் தரலாம், அல்லது தீய பலனையும்...
ஆடாதொடை இலையின் பயன்கள்

நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.