சிக்கன் சமோசா செய்வது எப்படி

சிக்கன் சமோசா செய்வது எப்படி

சிக்கன் சமோசா தேவையான பொருள்கள்

  1. சிக்கன் – 250 கிராம் (எலும்பில்லாதது)
  2. இஞ்சி – 1 துண்டு ( பொடியாக நறுக்கியது )
  3. எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
  4. மைதா – 250 கிராம்
  5. 5 சோம்பு – ½  ஸ்பூன்
  6. உப்பு – தேவையான அளவு
  7. பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது )
  8. கரம் மசாலா – 1 ஸ்பூன்
  9. பட்டாணி – 1 கப் ( வேக வைத்தது )
  10. பெரிய வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது )
  11. கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி

செய்முறை

  1. முதலில் 250 கிராம் மைதாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்க்கவும்.
  2. பின்னர் மாவுடன் தேவையான அளவு உப்பு சிறிதளவு எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  3. எடுத்து வைத்துள்ள 250 கிராம் சிக்கனை நன்றாக கொந்தி எடுத்துக் கொள்ளவும்.
  4. சிக்கனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. இப்பொழுது வெந்த சிக்கனை வேறு ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  6. எண்ணெய் சூடானவுடன் ½ ஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ளவும்.
  7. சோம்பு பொரிந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. வெங்காயம் வதங்கியவுடன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  9. பின்னர் வேக வைத்த பச்சை பட்டாணி, சிக்கன், சேர்த்து நன்கு கிளறி சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
  10. 10. இப்போது நாம் பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  11. உருட்டிய மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து சிறிது மைதா மாவு தூவி மாவை வட்டமாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
  12. பின்னர் ஒரு கத்தி வைத்து அதனை அரை வட்டமாக வெட்டி அதில் இன்னும் கூட தேவையான அளவு மைதா மாவை தூவி நீள வாக்கில் ரிப்பன் போல நன்கு தேய்க்கவும்.
  13. இருக்கின்ற எல்லா மாவையும் இதே போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
  14. இப்போது சப்பாத்திக் கல்லை அடுப்பில் வைத்து தேய்த்த மாவை அதிகம் வாட்டாமல் ஒரு நிமிடம் மட்டும் வாட்டி எடுத்துக் கொள்ளவும்.
  15. இந்த ரிப்பன் போல தேய்த்த மாவின் நுனியை மடக்கி அதனுள் ஒரு டீஸ்பூன் அளவு சிக்கன் கலவை வைத்து முக்கோண வடிவில் மடிக்கவும்.
  16. கடைசியாக வரும் பகுதியை மைதா பசையால் ஒட்டி விடவும் அப்போதுதான் சமோசா பிரியாமல் இருக்கும்.
  17. தயார் செய்த சமோசாக்களை பிரீஸரில் நிமிடத்திற்கு வைக்கவும்.
  18. பின்னர் ஒரு கடாயில் சமோசா பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  19. எண்ணெய் சூடானதும் சமோசாக்களை எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுத்தால் சுவையான சிக்கன் சமோசா ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கரிசலாங்கன்னி கீரை

கரிசலாங்கண்ணி மருத்துவ குணங்கள்

கரிசலாங்கண்ணி கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்பது ஒரு மருத்துவ மூலிகைச் மற்றும் கீரை செடியாகும். கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி ஆகும். மஞ்சள் நிற பூக்கள்...
ராசிக்கல் பலன்கள்

இராசிக்கல் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

இராசிக்கல் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி உண்டு. ஒவ்வொரு அதிபதிக்கும் ஒவ்வொரு ராசிக்கல் உண்டு. ராசிக்கல் அணிவதால் மட்டுமே ஒருவர் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியும் அடைய முடியும் என்பது உண்மையல்ல. ராசிக்கல் அணிந்ததால்...

சீந்தில் கொடியின் மருத்துவ பயன்கள்

சீந்தில் கொடி சீந்தில் என்பது மரங்களில் பற்றி படரும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் போன்ற மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம்...
பஞ்சமி திதி பலன்கள்

பஞ்சமி திதி பலன்கள், பஞ்சமி திதியில் செய்ய வேண்டியவை

பஞ்சமி திதி பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில...
மின் விபத்துக்கான முதலுதவிகள்

மின்சார விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

மின்சார விபத்து மழைக் காலங்களில் மின்சார விபத்து ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. புயல், மழை காலங்களில் பொது இடங்களிலும், வீடுகளிலும் மின்சார விபத்து பல்வேறு விதங்களில் ஏற்படுகிறது. அந்த எதிர்பாராத நேரத்தில்  மின்சார விபத்து ஏற்பட்டால்...
ஆடியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், தங்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் கற்பனை சக்தி கொண்டவர்கள். அந்த...
சோம்பு தண்ணீர் நன்மைகள்

தினமும் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் சித்த மருத்துவத்தில் சோம்பு ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடித்து வந்தால் இரத்தில் இருக்கக்கூடிய அழுத்தத்தையும்,  இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.