சில்லி சிக்கன் வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி

சில்லி சிக்கன்

அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனை வித விதமாக சாப்பிட அதிக ஆர்வம் காட்டுவார்கள். தற்போதைய நவீன உலகில் வித விதமான சிக்கன் உணவுகள் விரைவாகவும், எளிதாவும் தயார் செய்யபடுகிறது. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்றுதான் சைனீஸ் வகை உணவான சில்லி சிக்கன். இந்த சில்லி சிக்கனை வீட்டிலேயே எவ்வாறு எளிதாக தயார் செய்வது என்பதை பார்ப்போம்.

சில்லி சிக்கன் வீட்டில் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

1. கோழி கறி – 1/2 கிலோ (எலும்பில்லாதது)
2. சோள மாவு – 50 கிராம்
3. இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜைக்கரண்டி
4. மிளகாய் தூள் – 2 மேஜைக்கரண்டி
5. அரிசி மாவு – 2 மேஜைக்கரண்டி
6. முட்டை – 2
7. தயிர் – 1 மேஜைக்கரண்டி
8. உப்பு – தேவையான அளவு
9. எண்ணெய் – தேவையான அளவு
10. எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி
11. வெங்காயம் – 1
12. குடைமிளகாய் – சிறிதளவு
13. தக்காளி சாஸ் – சிறிதளவு
14. கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

1. முதலில் கோழிகறியை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

2. சோள மாவுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், அரிசி மாவு, முட்டை, தயிர், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

3. பிசைந்து வைத்துள்ள மாவு கலவையுடன் சிக்கனை போட்டு நன்றாக பிரட்டி குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

4. பிறகு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வெந்தவுடன் தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

5. மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கி கொள்ள வேண்டும்.

6. பின்பு அதனுடன் குடை மிளகாயை போட்டு வதக்கி கொள்ள வேண்டும்.

7. இதனுடன் பொரித்து வைத்த கோழிகறியை போட்டு இரண்டு நிமிடம் நன்றாக கிளறி கொள்ளவும்.

8. பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மசாலாக்கள், உப்பு, தக்காளி சாஸ் போட்டு கிளறி கொள்ளவும்.

9. பின்பு இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் சுண்டும் வரை நன்றாக கிளறி கொள்ளவும்.

10. பின்பு இதனுடன் கறிவேப்பிலை தூவி பரிமாறினால் சுவையான சில்லி சிக்கன் தயார்.

அதனுடன் வெங்காயம், மிளகு தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சுவையான சில்லி சிக்கன் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அமில பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

அமில பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

அமில பாதிப்பு ஏற்பட்டால் வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலங்கள் உபயோகப்படுத்துவோம். எவ்வளவுதான் ஜாக்கிரதையாக அமிலத்தை கையாண்டாலும் நம்மை அறியாமல் ஒரு சில விபத்துகள் ஏற்படும். மேலும்...
நட்சத்திர தோஷம்

நட்சத்திர தோஷங்களும், பரிகார முறைகளும்

நட்சத்திர தோஷங்களும், பரிகாரங்களும் ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும், ஒரு நட்சத்திரத்துக்கு 4 பாதங்களும் உண்டு. இவ்வுலகில் பிறக்கும் எந்த ஒரு மனிதனும் இந்த மேற்கண்ட ராசி, நட்சத்திரம் மற்றும் நட்சத்திர பாதத்தில்...
புரட்டாசி மாத வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

புரட்டாசி சனிக்கிழமை விரதம் தமிழ் மாதங்கள் மொத்தம் 12. அதில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால் அது புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் ஆகும். புரட்டாசி...
தான்றிக்காய் பயன்கள்

தான்றிக்காய் மருத்துவ குணங்கள்

தான்றிக்காய் தான்றி என்பது ஒரு மர இனமாகும். இது மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் பட்டையும் பழமும் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இது இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகளவில் வளர்கிறது. மார்ச்...
கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக் ஆண், பெண் இருவருக்குமே தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். குறிப்பாக பெண்களுக்கு தலைமுடிதான் அழகு. நீண்ட அடர்த்தியான...
கனவில் பூச்சிகளை கண்டால்

பூச்சிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூச்சிகள் கனவில் வந்தால் கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மை அறியாமல் வருவதாகும். குறிப்பிட்ட சில சமயங்களில், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. நாம்...
இறால் சீஸ் ரோல்

இறால் சீஸ் ரோல் – Prawn Cheese Roll

இறால் சீஸ் ரோல் இறால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறால் உணவு பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம் இது சுவை, மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகவும் திகழ்கிறது....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.