வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரை

வல்லாரை கீரை என்பது ஒரு பல்வேறு மருத்துவ மூலிகைப் பயன்பாட்டுடைய கீரை வகைத் தாவரமாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகளை உணவாகப் பயன்படுத்துவதால் இத்தாவரம், கீரை இனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

வல்லாரை கீரை நன்மைகள்

வல்லாரை கீரையில் உள்ள சத்துக்கள்

வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை எனப்பெயர் பெற்றது. வல்லாரை ஞாபக சக்தியை மேம்படுத்துவதால் இது சரஸ்வதி கீரை என்றும் அழைக்கபடுகிறது. வல்லாரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் A, C மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, இந்த கீரை சரியான அளவில் கொண்டுள்ளது. இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.

வல்லாரை தரையில் படர்ந்து பரவும் தன்மை கொண்டது. இதன் படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் முளைக்கின்றன. இது இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களில், குறிப்பாக ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்த வயல் வெளிகளிலும் காணப்படுகின்றன. வல்லாரையின் இலைகள் வட்ட வடிவமாக தவளையின் பாதம் போன்ற அமைப்பை கொண்டது.

வல்லாரை வளரும் இடங்கள்

வல்லாரை இந்தியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, மற்றும் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது.

வல்லாரையின் பயன் தரும் பகுதிகள்

வல்லாரையின் இலைகள் உட்பட முழுத் தாவரமும் உணவாகவும், மருத்துவத்திலும் பயன்படுகிறது.

வல்லாரை இனங்கள்

வல்லாரையில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் அதிகமாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் அதிகமாகவும், இலை சிறியதாகவும் உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் கொண்டது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரஸ்வதி மூலிகை என்றும் அழைக்கின்றனர்.

வல்லாரை கீரையின் வேறு பெயர்கள்

வல்லரையானது பிராம்மி, சரஸ்வதி கீரை, சண்டகி, பிண்டீரி, யோசனை வல்லி, சரஸ்வதி மூலிகை என பல பெயர்களில் அழைக்கபடுகிறது.

வல்லாரை கீரையை சாப்பிடும் முறை

1. வல்லாரையை காலை நேரத்தில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று சாப்பிட்டு வந்தால், மூளை மிகுந்த சுறுசுறுப்படையும்.

2. காலை வேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவு வல்லாரை கீரையைப் பச்சையாக நன்கு மென்று சாப்பிட்ட பின், பசும்பாலை குடித்து வந்தால், மாலைக்கண் நோய் குணமாகும்.

3. காலை நேரத்தில் வல்லாரையை மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணியும்.

4. வல்லாரை சாப்பிடும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. மேலும் புளி மற்றும் காரம் அதிகமாக சேர்த்து கொள்ள கூடாது. அப்போதுதான் அதன் முழுமையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.

5. இந்த கீரையை பச்சையாக உண்ணுதல் மிகவும் நல்லது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

வல்லாரை மருத்துவப் பயன்கள்

மனநோயை குணபடுத்தும்

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக சாப்பிட்டு விட்டு, நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் குடித்து வரவும். மேலும் அந்த சமயங்களில் உணவில் உப்பு, புளி அதிகம் சேர்த்து கொள்ளகூடாது. அப்படி சாப்பிட்டு வந்தால் மனநோய்கள் மறைந்து மனதில் மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல மனநோய்களும் அகலும்.

ஞாபசக்தி உண்டாகும்

நல்ல ஞாபசக்தி உண்டாக வல்லாரை இலையுடன் அரிசி, திப்பிலி சேர்த்து ஊறவைத்த மைபோல அரைத்து, காலை, மாலை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் நல்ல ஞாபசக்தி உண்டாகும்.

யானை கால் நோய் தீரும்

வல்லாரை இலையுடன் பால் கலந்து அரைத்து, விழுதை நெல்லிக்காய் அளவு தினமும் உண்டு வர நரை, திரை அகலும். இளமைத் தோற்றம் திரும்பும். இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் குணமாகும்.

இதயநோய்களை தீர்க்கும்

வல்லாரை இலைகள் 3, அக்ரோட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 1, மிளகு 3, கற்கண்டு 10 கிராம் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து விழுதாய் அரைத்து, அதைப் பாலில் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் இருந்தால் மாயமாய் மறையும்.

சீதபேதி குணமாகும்

குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி குணமாக, 2 வல்லாரை இலையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சர்க்கரைக் சேர்த்து கொடுக்கக் சீதபேதி குணமாகும்.

தோல் நோய்கள் குணமாகும்

சிறிது வல்லாரை இலைகள், புழுங்கல் அரிசி வடித்தது கால் கிலோ, ஐந்து மிளகு சேர்த்து மாவு போல அரைத்து கொள்ளவும். பின்பு அதனுடன் தேவையான அளவு சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்து, அந்த மாவில் ரொட்டி போல் சுட்டு சாப்பிட்டு வர, படை, நமைச்சல், தோல் நோய்கள், குஷ்டம் போன்ற தோல் நோய்கள் தீரும்.

வயிற்று பூச்சிகள் அழியும்

அரை லிட்டர் வல்லாரை இலைச்சாற்றில் கால் கிலோ வாய்விளங்கத்தை ஊறவைத்து, அதை வெயிலில் உலர்த்தி கொள்ளவும். உலர்ந்ததும் தூள் செய்து காலை, மாலை வேளைகளில் ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோய் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள், கிருமிக் கோளாறுகள் மறையும்.

மலச்சிக்கல் மற்றும் குடல் புண்களை ஆற்றும்

10 கிராம் வல்லாரைப் பொடியோடு, 5 கிராம் அதிமதுரத் தூள் கலந்து இரவில் தூங்கப் போகும் முன் வெந்நீரில் கலந்து குடிக்க மலச்சிக்கல் தீரும். மேலும் வல்லாரைக் கீரையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், வாய்ப்புண், வாய் நாற்றம் போன்றவை குணமாகும்.

வல்லாரை இலையின் மருத்துவ நன்மைகள்

இரைப்பு நோய் குணமாகும்

வல்லாரை இலைச்சாற்றில் அரிசித் திப்பிலியை ஊறவைத்து உலர்த்தித் தூள் போல செய்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளை சிறிதளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட கபநோய்கள், இரைப்பு, இருமல் போன்றவை குணமாகும்.

பல்வேறு நோய்களை தீர்க்கும்

நரம்புத் தளர்ச்சி, தாது விருத்திப் பிரச்சனை, காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளித் தொல்லை, சிறு நீர்க் கோளாறு போன்றவற்றை குணப்படுத்துகிறது.

உடலுக்கு வலுவை தரும்

வல்லாரைத் தூள் 100 கிராம், அமுக்கரா கிழங்குத்தூள் 100 கிராம் அளவு எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். இந்த கலவையை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இரண்டு கிராம் அளவு தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, ஆரோக்கியம் உண்டாகும். இளைத்த உடல் பருக்கும்.

ரத்த சோகை குணமாகும்

சிறிது கைப்பிடி அளவு வல்லாரை இலைகளையும், அதே அளவு மணத்தக்காளி கீரையையும் எடுத்து அரைத்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரண்டு வாரத்தில் ரத்த சோகை நோய் முற்றிலும் குணமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூசம் நட்சத்திரத்தின் இராசி : கடகம் பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி பூசம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சந்திரன் பூசம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை -: சூரியன் பூசம் நட்சத்திரத்தின் பரிகார...
திரிதியை திதி

திரிதியை திதி பலன்கள், திரிதியை திதியில் செய்ய வேண்டியவை

திரிதியை திதி திரிதியை என்பது வடமொழி சொல்லாகும். திரிதியை என்றால் மூன்று என்று பொருள். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் மூன்றாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரிதியை சுக்கில...
உடைந்த மண் பாண்டங்கள்

வறுமை நீங்க வீட்டில் வைத்திருக்க கூடாத சில பொருட்கள்

வீட்டில் வைத்திருக்க கூடாத பொருட்கள்? வீட்டில் என்றும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நாம் அனைவருமே விரும்புவோம். அவ்வாறு நம் வீடு இருக்க நாம் நல்ல...
அட்சதை போடுவது எதற்காக

திருமணத்தில் அட்சதை தூவி வாழ்த்துவது ஏன்?

திருமணத்தில் அட்சதைப் போடுவது ஏன்? திருமணம், சீமந்தம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, கிரகப்பிரவேசம் என எந்த மங்களகரமான நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரியவர்களின் ஆசி அட்சதை மூலமாகத்தான் நமக்கு கிடைக்கிறது. அட்சதையை தூவி ஆசீர்வதிக்கும்...
தரை பசலை கீரை நன்மைகள்

தரை பசலை கீரையின் மகத்தான மருத்துவ பயன்கள்.

தரை பசலை என்கிற சிறு பசலை தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு...
கரிநாள் பரிகாரம்

கரிநாட்கள் என்றால் என்ன? கரிநாளில் சுபகாரியம் செய்வதை ஏன் தவிர்க்க வேண்டும்

கரிநாட்கள் என்றால் என்ன நமது கலெண்டர்களில் சில குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் கரிநாள் என்று குறிபிடபட்டிருக்கும். அப்படி கரிநாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சூரிய கதிர் வீச்சின் தாக்கம் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் சற்று...
4 வகை ராசிகளும் அதன் குணங்களும்

4 வகை ராசிகளும், அதன் குணங்களும்

ராசிகளின் வகைகள் மற்றும் அதன் குணங்களும் நீரும், நெருப்பும் ஒன்றாக இணையாது. நிலத்தோடு காற்றும் இணையாது. ஆனால் நெருப்போடும் காற்றும், நிலத்தோடு நீரும் இணையும். அதுபோலத்தான் இணையாக உள்ள ராசிக்காரர்களை இணைத்தால் மட்டுமே இல்லறம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.