ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி

ஆட்டுக்கால் பாயா

ஆட்டுக்கால் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் மிக பிரபலம். அதிலும் ஆட்டுகாலை வைத்து செய்யப்படும் பாயா டிபன் வகைகளுக்கு சிறந்த சைடுடிஷ் ஆகும். ஆட்டுகால் எப்படி செய்வது என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

ஆட்டுக்கால் பாயா குருமா

ஆட்டுக்கால் பாயா செய்ய தேவையான பொருட்கள்

1. ஆட்டுக்கால் – 4
2. வெங்காயம் – 4
3. தக்காளி – 3
4. இஞ்சி பூண்டு விழுது – 4 மேஜைகரண்டி
5. கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி அளவு
6. பச்சை மிளகாய் – 5
7. தேங்காய் பால் – 1 கப்
8. தேங்காய் துருவல் – 1/4 கப்
9. முந்திரி – 10
10. கசகசா – 1 மேஜைகரண்டி
11. மஞ்சள் தூள் – 1 மேஜைகரண்டி
12. மிளகாய் தூள் – 2 மேஜைகரண்டி
13. உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

1. சோம்பு – 1 மேஜைகரண்டி
2. பிரிஞ்சி இலை – 2
3. பட்டை – 4 துண்டு
4. லவங்கம் – 4
5. ஏலக்காய் – 4
6. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

1. தேங்காய் துருவல், முந்திரி, கசகசா, 2 பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

2. 2 வெங்காயம் மற்றும் ஒரு தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் வைத்து கொள்ளவும்.

3. ஆட்டுக்காலை நன்றாக சுத்தம் செய்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

4. மீதமுள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

5. இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான மேற்கூறிய பொருட்களை தாளித்து கொள்ளவும்.

6. தாளித்து முடித்ததும் வெங்காயம், மீதமிருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக்கும் வரை நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.

7. இப்போது அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அவை நன்றாக வதங்கிய பின் வேக வைத்துள்ள ஆட்டுக்கால் கலவையை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

8. நன்றாக கொதிக்கும் போது தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.

9. இப்போது சுவையான ஆட்டுக்கால் பாயா தயார்.

இதனுடன் சூடான சப்பாத்தி, நாண், பரோட்டா, ஆப்பம், தோசை, இடியாப்பம் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? பத்து பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாக கருதப்படுவது ரஜ்ஜூ பொருத்தமாகும். கணவராக வரபோகிறவரின் ஆயுள் நிலையை அறிந்து கொள்வதற்கு ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், பெண்ணின்...
how to make prawn 65 recipe

ஹோட்டல் ஸ்டைல் இறால் 65

இறால் 65 தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ சோளமாவு - 1 ஸ்பூன் மைதா மாவு - 1 ஸ்பூன் முட்டை – 1 தயிர் – 2 ஸ்பூன் இஞ்சி,...
துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவனாவார். சுக்கிரன் லக்னாதிபதியாக இருப்பதால் இயற்கையாகவே நல்ல அழகும், கவர்ச்சியான உடலமைப்பும் கொண்டிருப்பார்கள். துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் தராசு போல எதையும் சீர்தூக்கி...

ஆட்டு தலைக்கறி குழம்பு செய்வது எப்படி

ஆட்டு தலைக்கறி குழம்பு ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகளவில் உள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் பல்வேறு வித பலன்களை தருகிறது. சிலருக்கு ஆட்டின் தலைக்கறி மிகவும் விருப்ப உணவாக இருக்கும். தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய்கள்...
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மற்றும் கன்னி உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன் உத்திரம் முதல் பாதத்தின் இராசி மற்றும் அதிபதி - சிம்மம் : சூரியன் உத்திரம் இரண்டாம்,...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கன்னி லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் அடக்கமான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். எல்லாவற்றிலும் திறமைசாலியாக விளங்குவார்கள். படிப்பில் கெட்டிகாரர்கள்....
வெந்தயக்கீரை மருத்துவ குணங்கள்

வெந்தயக்கீரை மருத்துவ பயன்கள்

வெந்தய கீரை வெந்தயம் கீரை மற்றும் வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயம் தமிழர்களின் சமையலில் தவறாமல் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருளாகும். இதன் செடி கீரையாகவும், இதன் விதைகளான வெந்தயம் உணவுகளில் சுவையூட்டியாகவும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.