வீட்டில் இருக்கும் திருஷ்டி கழிப்பது எப்படி?

திருஷ்டி கழிப்பது எப்படி

வீட்டில் எதிர்மறை தீய சக்திகள் அதாவது எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் இருந்தால் அவற்றை திருஷ்டி என்கிறார்கள். வீட்டில் திருஷ்டி ஏற்பட்டிருந்தால் கஷ்டங்கள், பொருளாதார இழப்புகள், மன சஞ்சலம் போன்றவை ஏற்படும். வீட்டில் நிம்மதி என்பதே இருக்காது. இவ்வாறு வீட்டில் ஏற்பட்டிருக்கும் திருஷ்டி தோஷத்தைப் போக்க முன்னோர்கள் பல வழிமுறைகளை சொல்லி வைத்துள்ளனர். கீழ்கண்ட பரிகாரங்கள் செய்வதன் மூலம் திருஷ்டி கழிவதுடன் வீட்டில் இருந்து பல்வேறு நச்சுக்களும் வெளியேறுவதாக நம்பப்படுகிறது.

வீட்டில் திருஷ்டி கழிப்பது எப்படி

திருஷ்டி கழிக்கும் முறைகள்

  1. அமாவாசை, பவுர்ணமி போன்ற முக்கிய தினங்களில் உச்சிவேளையில் வீட்டிற்கு திருஷ்டி கழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்கு திருஷ்டி கழிக்கலாம்.
  2. தண்ணீரில் சிறிது மஞ்சள் கலந்து அதனுடன் வேப்பிலை சேர்த்து வீட்டின் அனைத்து பகுதிகளிலும் அந்த நீரை தெளிக்க வேண்டும். மஞ்சளும் வேப்பிலையும் மிகச் சிறந்த கிருமி நாசினியாகும்.
  3. கடல் நீரை கொண்டு வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் விலகும்.
  4. எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின் மேல் குங்குமம் பூசி திருஷ்டி சுற்றி வீசி எறியலாம்.
  5. ஆகாச கருடன் கிழங்கை எடுத்து அதில் மஞ்சள் சந்தனம் குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம். ஆகாச கருடன் கிழங்கு வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றும் என நம்பப்படுகிறது.
  6. அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை மாலை என இருவேளையும் சாம்பிராணி தூள், கருவேலம்பட்டை தூள், வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீட்டில் தூப தீப புகை காட்டினால் அனைத்து வகையான திருஷ்டிகளும் தீய சக்திகளும் வீட்டை விட்டு வெளியேறும் என்பது நம்பிக்கை.
  7. செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் பூசணிக்காயை வைத்து வீட்டில் திருஷ்டி சுற்றி போடலாம்.
  8. கிரகபிரவேச சமயங்களில் வீட்டில் பசுவையும், கன்றையும் வீட்டிற்கு அழைத்து வருவதை பார்த்திருப்போம். கோமாதா வீட்டிற்குள் வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அது போல திருஷ்டி இருக்கும் வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பசுவை வீட்டிற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்களும், திருஷ்டிகளும் நீங்கும்.
  9. அதே போல வருடத்திற்கு ஒரு முறை வீட்டில் கணபதி ஹோமம் செய்யலாம். இதனால் அனைத்து திருஷ்டிகளும் கழிந்து வீடு சுபிட்சமடையும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

brinjal uses in tamil

கத்திரிக்காய் மருத்துவ குணங்கள் | Brinjal Benefits in Tamil

கத்திரிக்காய் கத்தரிக்காய் செடியின் அறிவியல் பெயர் சொலனும் மெலோங்கெனா ஆகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடி கொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகையாகும். சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற...
சரும வறட்சியை தடுக்க

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும்

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும் பருவ நிலை மாறும் போது நம் உடலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்றுதான் சரும வறட்சி. சரும வறட்சி  பெரும்பாலானோருக்கு குளிர் காலத்தில்தான் ஏற்படும். குளிர் காலத்தில்...
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கிருத்திகை நட்சத்திரம் நட்சத்திரத்தின் இராசி: மேஷம் 1ம் பாதம், ரிஷபம் 2, 3 மற்றும் 4 ம் பாதம். கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன். கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கான...
ஊர்வன விலங்குகள் கனவு பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் புத்தகம் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
மிதுன ராசி

மிதுன ராசி பொது பலன்கள் – மிதுன ராசி குணங்கள்

மிதுன ராசி குணங்கள் மிதுன ராசியின் அதிபதி புதன் பகவனாவார். மிதுன ராசியில் மிருகசீரிஷம் நட்சத்திரம் 3, 4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரங்கள் 1, 2, 3 ஆம் பாதங்கள் ஆகியவை...
மட்டன் மசாலா

மதுரை மட்டன் மசாலா 

மதுரை மட்டன் மசாலா தேவையான பொருட்கள் மட்டன் – ½ கிலோ வெங்காயம் - 2  ( பொடியாக நறுக்கியது ) தனியாத்தூள் - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1...

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவான் ஆவார். இவர்களில் பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு, பெரிய வாய், அகலமான தோள்கள் கொண்டவராக இருப்பார்கள். கம்பீரமான உடல்வாகை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.