பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் தெரியுமா

குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஒரு உண்மை மறைந்திருக்கும். அப்படிப்பட்ட பழக்க வழக்கங்களுள்  ஒன்று பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது அல்லது பிறந்த முடி எடுப்பது. ஒரு சில குடும்பங்களில் குழந்தை பிறந்த சில மாதங்களிலும், இன்னும் ஒரு குடும்பங்களில் ஒரு வருடத்திற்குள்ளும் குழந்தைகளுக்கு மொட்டை போடுவார்கள். எதற்கு இந்த பழக்கத்தை மேற்கொள்கிறார்கள் என பின்வருமாறு பார்க்கலாம்.

மொட்டை போடுவது ஏன்

ஏன் மொட்டை போடுகிறார்கள்

பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை போடுவதற்கு முக்கிய காரணம் குழந்தை தாயின் கருவறையில் பத்துமாதம் இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே. தாயின் கருவறையில் இருக்கும்போது ரத்தம், சிறுநீர் போன்ற சூழ்நிலையில் இருக்கும். குழந்தை பிறக்கும்போது இந்த கழிவுகள் வெளியே வந்துவிட்டாலும், கண்ணுக்கு தெரியாத சில கழிவுகள் குழந்தையின் தலையில் சேரும்.

உடலில் சேரும் இந்த கழிவுகள் தலையில் உள்ள மயிர்கால்கள் வழியாகத்தான் வெளியேற முடியும். இந்த கழிவுகளை மொட்டை போடுவதன் மூலமாகத்தான் வெளியேற்ற முடியும்.

மொட்டை போடாவிட்டால் என்ன ஆகும்

மொட்டை போடாவிட்டால் அந்த கழிவுகள் அப்படியே தலையில் தங்கி அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும். உதாரணமாக சொறி, சிரங்கு, பொடுகு போன்றவை. உடலுக்கு தலையே பிரதானம். தலையை சுத்தமாக வைத்து கொள்ளவிட்டால் அது பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவேதான் மொட்டை என்ற பெயரில் நம் முன்னோர்கள் தலையில் உள்ள கழிவுகளை அகற்ற பிறந்த குழந்தைக்கு மொட்டை போடும் பழக்கத்தை கொண்டு வந்தனர்.

ஒரு சில குடும்பங்களில் தங்கள் குழந்தைக்கு சிறிது கால இடைவெளியில் இரண்டாவது மொட்டை போடுவார்கள். இதற்கு காரணம் முதல் மொட்டை போடும்போது வெளியேறாத சில கழிவுகள் இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதால்தான். நம் மக்களிடம் நேரடியாக பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுங்கள் என்று அறிவியல் ரீதியாக சொன்னால் போடமாட்டார்கள். அதனால் தான் சாமிக்கு நேர்த்திகடன் என்ற பெயரில் மக்களிடம் இதை செய்ய சொன்னார்கள். எதையும் ஆன்மிகம் கலந்த அறிவியலுடன் சொல்வதே நம் முன்னோர்களின் வழக்கமாக இருந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சிம்ம லக்னத்தின் அதிபதி சூரிய பகவானவார். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். மற்றவர்கள் இவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களை கண்டு பிறர்...
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அவிட்டம் நட்சத்திரத்தின் இராசி : மகரம் மற்றும் கும்பம் அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பாதம் இராசி அதிபதி (மகரம்) : சனி அவிட்டம்...
வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது

வாய் துர்நாற்றம் நீங்க நிரந்தர தீர்வு

வாய் துர்நாற்றம் வாய்துர்நாற்றம் பாதிப்பு இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இதனால் தனது நெருங்கிய துணையுடன் கூட பேச முடியாமல் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். சிலருக்கு வாய் சுகாதாரமாக இருந்தாலும் உண்ணும் உணவில் உள்ள...
ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி

ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி

ஆட்டுக்கால் சூப் தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 4 தனியா தூள் – 2 ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் சீரகத் தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் –...
தூதுவளை நன்மைகள்

தூதுவளை மருத்துவ குணங்கள்

தூதுவளை தூதுவளை என்பது உணவிலும் மருத்துவத்திலும் அதிகம் பயன்படும் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை கொடியாகும். சித்தர்கள் சுட்டிக்காட்டியுள்ள காயகற்ப மூலிகைகளில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை...
மாவிலை தோரணம் கட்டும் முறை

சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம் வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும். வீட்டில் நடக்கும் எந்த...
நவராத்திரி வழிபாடு

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் 

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் மாகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை வரக்கூடிய 9 நாட்களை தான் நாம் நவராத்திரி என்று அழைக்கிறோம். நாளை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.