கனவுகள் பலிக்குமா, எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும்

கனவுகள் பலிக்குமா

நாம் உறக்கத்தில் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என்றும் இன்னும் சிலர் மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிபடுகின்றன என்றும் கூறுகின்றனர். கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதே வருகின்றன. உண்மையில் உறக்கத்தில் வரும் கனவுகள் பலிக்குமா, பலிக்காதா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகள் பலிக்கும் என்று கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காணும் கனவுக்கு நிச்சயம் பலனுண்டு என்று கூறுகிறது. இவற்றை பற்றி விரிவாக காணலாம்.

கனவுகள் பலிக்குமா

எந்த நேரத்தில் வரும் கனவு பலிக்கும்

நாம் காணும் கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். மாலை 6 மணிமுதல் 8.24 மணிக்குள் வரும் கனவு ஒரு வருடத்திலும் இரவு 8.24 மணிமுதல் 10.48 மணிக்குள் வரும் கனவு 3 மாதத்திலும், இரவு10.48 மணிமுதல் நள்ளிரவு 1.12 மணிக்குள் வரும் கனவு 1 மாதத்திலும், நள்ளிரவு 1.12 மணி முதல் அதிகாலை 3.36 மணிக்கு வரும் கனவு 10 நாளிலும், அதிகாலை 3.36 மணிமுதல் விடியல் காலை 6.00 மணிக்குள் வரும் கனவுகள் உடனடியாக பலிக்கும் என பஞ்சாங்க சாஸ்திரங்களில் குறிபிடப்பட்டுள்ளன. பகலில் காணும் கனவுகள் பெரும்பாலும் பலிப்பதில்லையாம்.

எவ்வாறான கனவுகள்

நாம் காணும் எல்லா கனவுகளும் நிச்சயம் பலிப்பதில்லை. மாறாக சில கனவுகள் வந்த உடனே மறைந்து விடும். மேலும் ஒரு சில கனவுகளை நம்மால் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. மேலும் ஒரு சில கனவுகள் பசுமரத்தாணி போல் நம் மனதில் நீண்ட காலத்திற்கு நினைவில் நிற்கும். நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒரு சில பயங்கர கனவுகள் வந்து திடுக்கிட்டு எழுவோம். அவை இது போன்ற கனவுகளாகும்.

கனவுகள் உண்மையா

மேலும் ஒரு சிலருக்கு எதிர்காலத்தில் நடக்க இருக்கும் சம்பவங்கள் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் அவர்களுக்கு கனவுகள் மூலம் முன்னதாகவே காட்டி கொடுக்கும். கனவின் பலன்கள் நிறைய உண்டு. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், அமானுஷ்யங்கள், பூச்சிகள், முன்னோர்கள், பூக்கள், பழங்கள், பரிகாரங்கள் என அவற்றில் சில கனவுகள் நமக்கு வந்து போகின்றன. அந்த கனவின் அர்த்தம் தெரியாமல் தவிப்போம். அவற்றிற்கான அர்த்தம் தெரியவே இந்த தொகுப்பு.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் மரம் ‘குளுசியாசியே’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. இது பழங்களின் அரசி என அழைக்கபடுகிறது. இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து...
சித்த மருத்துவம் பயன்கள்

சித்த மருத்துவம் என்றால் என்ன? சித்த மருத்துவ பயன்கள்

சித்த மருத்துவம் சித்த மருத்துவம் (Siddha Medicine) என்பது பழங்காலத்தில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை...
நகங்களை பராமரிப்பது எப்படி

கை மற்றும் கால் நகங்களை அழகாக வைத்திருக்க சில டிப்ஸ்

அழகான நகங்களை பெற    நம் உடலின் மற்ற பாகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல நகங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நகங்களை அழகாக வைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். நகங்களை பராமரிப்பதில் ஆண்களை காட்டிலும்...
முசுமுசுக்கை கீரை பயன்கள்

சுவாச பிரச்சனைகளை நீக்கும் அற்புத சக்தி கொண்ட முசுமுசுக்கை கீரை

முசுமுசுக்கை கீரை முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக படர்ந்து வளர்ந்திருக்கும். முசுமுசுக்கை செடியின் இலை, மற்றும் தண்டுகளில் சிறிய...
விஜயதசமி சிறப்புகள்

விஜயதசமி வழிபாட்டின் பலன்கள் மற்றும் பயன்கள்

விஜயதசமி வழிபாடு அகில உலகத்தையும் காக்கக்கூடிய அம்பிகையானவள்  சக்தி, லக்ஷ்மி, சரஸ்வதி என மூன்று தேவிகளின்  சொருபமாக அவதரித்து மகிஷாசுரன் என்ற அரக்கனிடம் 9 நாட்கள் போர் புரிந்து பின் 10 வது நாளில்...
ஜோதிடத்தில் யோகங்கள்

யோகங்கள் என்றால் என்ன? பலவகையான ஜாதக யோகங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...

திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

திருமண தடை  நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இரு மணங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்த திருமணம் சரியான காலத்திலும் சரியான வயதிலும் நடைபெறுவது முக்கியமானதாகும்.  சிலரது ஜாதகத்தில் இருக்கும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.